Header Ads



இனியும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன் - ஜனாதிபதி சீற்றம்

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்கு உழைக்காத ஸ்ரீ ல.சு.க. உறுப்பினர்களுக்கு எதிராக கட்சியின் அரசியல் யாப்புக்கு அமைவாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ல.சு.கட்சியை பிரிப்பதற்கோ, பலவீனப்படுத்துவதற்கோ யாருக்கும் தான் இடமளிக்கப் போவதில்லையெனவும் ஜனாதிபதி கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

கட்சியின் உறுப்பினர்கள் கட்சிக்கு எதிராக செயற்படும் போது தான் இனியும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன் எனவும் ஜனாதிபதி  கூறியதாக மத்திய செயற்குழு உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 

1 comment:

Powered by Blogger.