Header Ads



நாட்டினை நாசமாக்கியவர்களை, நாம் ஆட்சியமைத்ததும் தண்டிப்போம்

நல்லாட்சி என்ற பெயரில நாட்டினை நாசமாக்கியதில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எவ்வாறு பொறுப்புக் கூட வேண்டுமோ அதேபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் பொறுப்புக்கூறியாக வேண்டும். மறைமுகமாக அரசாங்கத்தை ஆதரித்து நாட்டினை நாசமாகியுள்ளனர் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின்  உறுப்பினர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பஷில் ராஜபக் ஷ தெரிவித்தார். மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து குற்றவாளிகளையும் தண்டிக்கவும் தயங்க மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டங்கள் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்  நீர்கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டார். 

2 comments:

  1. அப்ப ஆட்சிக்கு வந்ததும் அண்ணன், தம்பிமார், தம் பிள்ளைகளுடன் தானாக சிறைக்குள் செண்று தாளிட்டுக்கொள்வோம் என்கிறீர்கள்.

    ReplyDelete
  2. நல்லாட்சிக்கு இதுவும் வேண்டும்,இன்னமும் வேண்டும். கண்ணை இறுகப்ப பொத்தி காதை இறுக மூடிக்கிடக்கும் நல்லாட்சி இந்த நாட்டுமக்களையும் நாட்டையும் எங்கு கொண்டு போய் வைக்கும் என்பதை நினைக்க பயமாக இருக்கின்றது.

    ReplyDelete

Powered by Blogger.