எமக்கு ஐ.தே.கவுடன் மோதல் கிடையாது, 'மொட்டு' சவாலுமில்லை - சந்திரிகா
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எமக்கு தாமரை மொட்டுக் கட்சி ஒரு சவாலே கிடையாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். கம்பஹா மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்த பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
சு.க தலைவியாக நான் 12 தேர்தல்களில் 11 இல் வெற்றியீட்டினேன். கடைசியாக நடந்த ஜனாதிபதி தேர்தலிலும் மைத்திரிபால சிறிசேனவை வெல்ல வைத்தோம்.
நாம் ஐ.தே.க வுடன் இணைந்து அரசாங்கம் அமைத்து செயற்படுகிறோம். அதனால் எமக்கு ஐ.தே.கவுடன் மோதல் கிடையாது. தாமரை மொட்டில் இருந்து பிரிந்து பலர் எம்முடன் இணைந்து வருகிறார்கள்.சிறிமாவோ பண்டாரநாயக்கவை துரத்த 1980 இல் மஹிந்த ராஜபக்ஷ சதி செய்தார். 17 வருடங்கள் தேர்தலில் தோற்ற எமக்கு மீள எழ முடிந்தது. எனவே இம்முறை தேர்தலில் நாம் வெல்வது உறுதி. எமது கட்சியினர் யாரும் சீமெந்து பக்கெட்டுகள்,மற்றும் பொருட்கள் விநியோகிக்கவில்லை. ஏனையவர்கள் தான் அதனை செய்கின்றனர். (பா)
Post a Comment