Header Ads



பெண் வேட்பாளர்களுக்கு எதிராக ஏளனம், அவமரியாதை, சேறுபூச முற்றாக தடை

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களுக்கு எதிராக அலட்சியம், ஏளனம், அவமரியாதை, சேறு பூசும் நடவடிக்கைகள் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த சட்டதிட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழு வெளியிட்டுள்ள கட்டளை​களை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆணைக்குழுவின் கட்டளைகளை மீறும் அனைவருக்கு எதிராகவும் அரசமைப்பின் 104 வது சரத்துக்கு அமைய சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும், தெரிவித்துள்ள அவர்  அரச சொத்துக்களை பாதுகாத்தல் அரச அதிகாரிகளின் பொறுப்பு என்பதுடன் அதனை தட்டிக்கழிக்கும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அதிகாரிகள் நினைவில் வைத்துக்​கொள்ள வேண்டும் என்றும் தெரவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.