Header Ads



முக்கிய சிலர், சுதந்திர கட்சியுடன் இணையவுள்ளனர்

தேசிய சுதந்திர முன்னணியில் மாகாண சபை உறுப்பினர்கள் 3 பேரும், வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய உறுப்பினர்கள் 51 பேரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்தார்.

இந்தவாரம் மூன்று மாகாண சபை உறுப்பினர்கள் தம்முடன் இணைந்துள்ளனர்.

அடுத்தவாரம் அளவில் வேறு கட்சிகளைச் சேர்ந்த பலரும் தமது கட்சியுடன் இணைந்துக்கொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.