Header Ads



மஹிந்தவுடன் இணைந்­தி­ருந்தால் தமிழ், முஸ்லிம் மக்கள் எம்­முடன் இணைந்­தி­ருக்க மாட்­டார்கள்


ஒரு­வேளை நாங்கள் மஹிந்த தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணி­யுடன் இணைந்­தி­ருந்தால் இவ்­வாறு தமிழ், முஸ்லிம் மக்கள் அதி­க­ளவில் எம்­முடன் இணைந்­தி­ருக்க மாட்­டார்கள் என்றும் இரா­ஜாங்க அமைச்சர் சுட்­டிக்­காட்­டினார்.   

 சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் அர­சியல் மற்றும் தேர்தல் நட­வ­டிக்­கைகள் எவ்­வாறு அமைந்­துள்­ளன என்­பது தொடர்பில் விப­ரிக்­கும்­போதே டிலான் பெரேரா மேற்­கண்­ட­வாறு கோரினார்.    அவர் இது­தொ­டர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்;  

சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி மிகவும் வெற்­றி­க­ர­மான முறையில் தேர்தல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து செல்­கின்­றது. தற்­போது தமிழ், முஸ்லிம் மக்கள் சுதந்­தி­ரக்­கட்­சி­யுடன் அதி­க­ளவு இணைந்து வரு­வ­துடன் எமக்கு ஆத­ரவு தெரி­வித்து வரு­கின்­றனர்.   

இன­வாதக் கட்­சி­க­ளுடன் கூட்டு சேரா­மையின் கார­ண­மா­கவே இவ்­வாறு தமிழ், மற்றும் முஸ்லிம் மக்கள் எம்­முடன் இணைந்து வரு­கின்­றனர். குறிப்­பாக இன­வா­திகள் குவிந்து கிடக்­கின்ற கூட்டு எதி­ர­ணி­யுடன் இணைந்­து­கொள்­ள­வில்லை என்ற கார­ணத்­தி­னா­லேயே தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எம்­முடன் கைகோர்த்­தி­ருக்­கின்­றனர்.   

நாங்கள் ஒரு­வேளை மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணி­யுடன் இணைந்­தி­ருந்தால் தமிழ், மற்றும் முஸ்லிம் மக்கள் எம்­முடன் கைகோர்த்­தி­ருக்­க­மாட்­டார்கள் என்றே நம்­பு­கின்றோம். தற்­போ­தைய நிலை­மையில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியை விட சுதந்­தி­ரக்­கட்­சி­யு­ட­னேயே தமிழ் முஸ்லிம் மக்கள் அதி­க­ளவு இணைந்­து­வ­ரு­வதை காண முடி­கின்­றது. அந்­த­வ­கையில் நாங்கள் தமிழ், முஸ்லிம் மக்கள் உள்­ளிட்ட அனைத்து மக்­க­ளு­டனும் இணைந்து வெற்­றி­வாகை சூடுவோம்.   

இதே­வேளை தேர்­தலின் பின்னர் நாங்கள் எந்­தக்­கட்­சி­யுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைப்போம் என்று இப்­போது கூற முடி­யாது. காரணம் தேர்தல் முடி­வுகள் எவ்­வாறு அமையும் என்­பதை தற்­போது எதிர்வு கூறு­வது கடி­ன­மாகும். நாங்கள் அதி­க­மான சபை­களை கைப்­பற்­றுவோம் என்­பது உறு­தி­யாக இருக்­கி­றது.   

ஆனால் எவ்­வா­றான வீதத்தில் முடி­வுகள் அமையும் என்று கூற முடி­யாது. அதனால் நாங்கள் தேர்தலின் பின்னர் ஐ.தே.க.வுடனா அல்லது கூட்டு எதிரணியுடனா இணைந்து ஆட்சி அமைப்போம் என்பதை எதிர்வுகூற முடியாது. எவ்வாறெனினும் நாங்கள் அதிகமான சபைகளில் ஆட்சி அமைப்போம் என்பதை உறுதியாக தெரிவிக்கின்றோம் என்றார்.   

1 comment:

  1. Really mental case.
    He so jelloyus with Unp.
    Ranil has newer giving any power for you.

    ReplyDelete

Powered by Blogger.