Header Ads



பெண்கள் பற்றி வெளியாகியுள்ள, புதிய ஆய்வுத் தகவல்


கடுமையான சூழ்நிலையை சமாளிப்பதில் ஆண்களை விட பெண்கள் திறமைசாலிகள் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடுமையான சூழ்நிலையை பெண்கள் திறமையாக சமாளிக்கிறார்கள்: ஆய்வில் புதிய தகவல்
லண்டன்:

கடுமையான சூழ்நிலை ஏற்படும் போது நிலைமையை சமாளிப்பதில் பல வழிகள் கையாளப்படுகின்றன. அவர்களில் ஆண்களை விட பெண்கள் திறமையாக செயல்படுகின்றனர்.

இதுகுறித்து ஆய்வு டென்னிஸ் போட்டியின் போது மேற்கொள்ளப்பட்டது. அப்போது வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கடுமையான போட்டி ஏற்படும் சூழ்நிலையை சமாளிக்கும் விதம் குறித்து ஆராயப்பட்டது.

இதை இஸ்ரேலில் உள்ள நெகவ் பென்குரியன் பல்கலைக்கழகம் சுவிட்சர்லாந்து செயிண்ட் கேலன் பல்கலைக்கழகம், மற்றும் என்.ஒய்.யூ. ஷாங்காய் பல்கலைக்கழகங்களின் நிபுணர்கள் மேற்கொண்டனர்.

வெற்றியை நிர்ணயிக்கும் முக்கியமான புள்ளிகள் எடுக்கும் சூழ்நிலையை சமாளிப்பதில் வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் இடையே வித்தியாசம் தெரிந்தது.

போட்டியின் கடுமையான சூழ்நிலையில் ஆண்கள் மிகவும் திணறினார்கள். அதே நேரத்தில் பெண்கள் மிக எளிதாக எடுத்துக் கொண்டு சமாளித்தனர். அதே நிலைதான் சாதாரண மக்களிடமும் நிலவியது. அதன் மூலம் கடுமையான சூழ்நிலையை சமாளிப்பதில் ஆண்களை விட பெண்கள் திறமைசாலிகள் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

No comments

Powered by Blogger.