Header Ads



வடகிழக்கு இணைப்பே பலத்தை அளித்து, தமிழர் அருகுவதைத் தடுக்கும்

இனப்பிரச்சினையின் அடிப்படைக் காரணம் சிங்கள அரசியல்வாதிகள் அதிகாரங்களைத் தம்வசப்படுத்தி மற்றைய இனங்களுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டு வந்தமையே என முதலமைச்சா சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட கிழக்கை இணைக்க வேண்டும் என்ற உங்கள் கோரிக்கை சிங்கள, முஸ்லிம் தலைவர்களுக்கு எரிச்சலை மூட்டுவதாகக் கூறப்படுகிறதே. அதை விடுத்து இனப்பிரச்சினைக்கான தீர்வினைப் பெற முடியுமா? என முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த முதலமைச்சர்,

வடகிழக்கு மாகாணக் காணிகளில் அவ்வந்த மாகாண மக்களைக் குடியேற்றாது வெளியில் இருந்து சிங்களம் பேசும் மக்கள் கொண்டு வரப்பட்டு தொடர்ந்து வந்த அரசாங்கங்களினால் அவர்கள்அங்கு குறியேற்றப்பட்டார்கள்.

இவை யாவும் நடைபெற ஏதுவாக அமைந்தது நிலம்சார் பிரதிநிதித்துவமே. கூடிய நிலம் சிங்கள மக்களுக்குச் சொந்தமாக இருந்ததால் அவர்களின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினராகி தமிழ் மக்களுக்கு எதிராகவும் வேறு சிறுபான்மையினருக்கு எதிராகவும் சட்டங்களை ஆக்கவும் நடைமுறைப்படுத்தவும் வழி வகுத்தது.

வடகிழக்கில் பெரும்பான்மையினரான தமிழ் பேசும் மக்கள் முழு நாட்டிலும் சிறுபான்மையினர் ஆக்கப்பட்டனர். சுதந்திரம் கிடைத்து பத்து வருடங்களுக்கு மேலாக மலையகத் தமிழ் மக்கள் வாக்கின்றி வாழ்ந்து வந்தனர்.

ஆகவே இனப்பிரச்சினையின் அடிப்படைக் காரணம் சிங்கள அரசியல்வாதிகள் அதிகாரங்களைத் தம்வசப்படுத்தி மற்றைய இனங்களுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டு வந்தமையே.

இன்றைய வடகிழக்கின் நிலையை நோக்குங்கள். எமது மக்கள் பத்து இலட்சம் அளவில் வெளிநாடு சென்றுவிட்டார்கள். அரசாங்கம் வெளி மாகாணங்களில் இருந்து தமிழ்ப் பேசும் மக்கள் அல்லாதவர்களை வடகிழக்கில் குடியேற்றி வருகின்றார்கள். முன்னர் காலத்திற்குக் காலம் மீன் பிடிக்க வந்த தெற்கத்தைய மீனவர்கள் இப்பொழுது நிரந்தர வசிப்பிடங்களை அமைத்து தமிழ்ப்பேசும் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரங்களை பாதிப்படையச் செய்துள்ளார்கள்.

அவர்கள் தமது புலம் விட்டுச் செல்ல வழிவகுத்துள்ளார்கள். இராணுவம் ஒன்றரை இலட்சம் பேர் 65000 ஏக்கர் காணிகளில் வடமாகாணத்தில் நிலை கொண்டுள்ளார்கள். 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் எமக்குப் போதுமான அதிகாரங்கள் இல்லை.

ஆளுநர் கூடிய அதிகாரங்களை வைத்துக் கொண்டுள்ளார். தெற்கில் இருந்து முதலீட்டாளர்கள், வணிகர், வாணிபர் என்று பலரும் வந்து எமது வளங்களைச் சூறையாடிச் செல்கின்றார்கள்.

உணவகங்கள் உள்ளிட்ட வியாபார ஸ்தலங்கள் பலவற்றை இராணுவத்தினரும் கடற்படையினரும் நடத்தி வருகின்றனர். அவர்களைக் கட்டுப்படுத்த எமக்கு அதிகாரம் இல்லை.

போதைவஸ்த்துப் பாவனை எம் இளைஞர்களிடையே பரவி வருகின்றது. அதனால் வன்முறையும் பரவி வருகின்றது. பாலியல் குற்றங்கள் மலிந்து வருகின்றன.

கட்டுப்படுத்த எமக்கு அதிகாரம் இல்லை. வடகிழக்கில் தற்போதைய நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது என்பதை நான் கூறி வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

எமது தொகை குறைகின்றது. மற்றவர்களின் தொகை கூடுகின்றது. தமிழ் மக்களுடைய சனப் பெருக்க வீதமே சகல இனங்களுக்குள்ளும் ஆகக் குறைந்தது என்று கூறப்படுகின்றது.

ஆகவே தமிழ் மக்களின் தொகை படிப்படியாக வீழ்ச்சி அடையத் தொடங்கியுள்ளது. இன்னிலையில் தமிழ்ப் பேசும் மக்கள் வடகிழக்கில் சேர்ந்து வாழ வேண்டுமா பிரிந்து வாழ வேண்டுமா? பிரிந்து வாழ்ந்தால் எமது நிலை சீர் கெட்டுவிடும். பறங்கியர்களுக்கு இந் நாட்டில் ஏற்பட்ட கதியே இன்னும் 25 வருடங்களில் எமக்கும் ஏற்பட்டுவிடும்.

எம்மவர் வெளியேறி விடுவார்கள். மிகுதி இருப்பவர்களைப் பெரும்பான்மைச் சமூகம் உட்கிரகித்துக் கொள்ளும். ஆகவே வடகிழக்கு இணைப்பு ஒன்றே எமக்குப் பலத்தை அளிக்கும். எமது மக்கட் தொகை அருகி வருவதைத் தடுக்கும்.

ஆனால் வட கிழக்கு இணைப்பு தமிழ்ப் பேசும் முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் உருவாக முடியாது. தமிழ்ப் பேசும் வடகிழக்கு அலகில் முஸ்லிம் மக்களுக்கு சமச்சீரில்லாத தனி அலகை உருவாக்குவதன் மூலமே வடகிழக்கு இணைப்பு இனிச் சாத்தியமாகும்.

இந்தியாவின் பங்கு இதில் இனி இருக்காது என்பது தெளிவு. 18 வருடங்களுக்கு வடகிழக்கு இணைந்திருந்ததெனில் அது இந்தியாவின் உள்ளீடலால் தான்.

எனவே இன்றைய நிலையில் வடகிழக்கு இணைவு அவசியம் என்பது எம் மக்கள் யாவருக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும்.

வடகிழக்கு இணைப்பு இல்லாத தீர்வு தமிழ்ப் பேசும் மக்களைப் பாதிக்கும். பௌத்த சிங்கள மக்களின் கையை ஓங்க வைக்கும். இதனால் தமிழ்ப் பேசும் மக்களின் ஒற்றுமையும் சீர் குலைந்து போகும்.

எமது அதிகாரங்கள் பாதிக்கப்பட்ட நிலையிலேயே நாம் இன்று உள்ளோம். வடகிழக்கு இணைப்பு, சுயாட்சி, சமஷ்டி போன்ற கருத்துக்கள் வெறும் கருத்துக்கள் அன்று. எமது பாதுகாப்புக்கான கேடயங்கள். அவற்றை நாம் கைவிட்டால் எம்மை அடிபணிய வைப்பதும் அடியற்றுப் போக வைப்பதும் இலகுவாகிவிடும். இதனை எம்மக்கள் வரவேற்கின்றார்களா?

எமது மக்கள் தனிநாடு கோருவதையும் அதற்காக உணர்ச்சி மேலீட்டில் உரக்கக் கத்துவதையும் இனி நிறுத்த வேண்டும். இவ்வாறான கருத்துக்கள் அரசாங்கத்தைக் கெட்டியடையச் செய்யுமே தவிர எம்முடன் சுமூகமாக நடந்து கொள்ள உதவாது.

வடகிழக்கு இணைப்பு என்பது தனி நாடொன்றை உருவாக்க நாம் போடுஞ் சதி என்றே அரசாங்கம் பிறநாட்டு இராஜதந்திரிகளுக்குக் கூறிவருகின்றது.

அதனால் சர்வதேச கருத்துக்கள் வடகிழக்கு இணைப்புக்கு எதிராகவே இருக்கின்றது. முஸ்லிம் அரசியல் தலைவர்களின் எதிர்ப்பும் அரசாங்கத்திற்குச் சார்பாகவே அமைந்துவிட்டுள்ளது.

தனிநாடு என்பது பிற வல்லரசுகளின் தயவுடனேயே இயற்றப்பட முடியுமே தவிர நாம் கேட்டுப் பெறக் கூடியதொன்றல்ல. அடித்துப் பறிக்க முடியும் என்ற கருத்தும் அண்மையில் மௌனிக்கப்பட்டுவிட்டது.

நாம் தனித்து வாழத் தலைப்பட்டால் தலை நாடுகளின் சார்பாளர்களாகவே நாங்கள் மாற நேரிடும். என்றும் மாறாத பகைமையை எமது சிங்கள சகோதரர்களுடன் நாம் பாராட்ட வேண்டிய ஒருநிலை ஏற்படும்.

உண்மையில் ஆயுதங்கள் மௌனித்ததும் தனி நாட்டுக்கான கோரிக்கையும் அவற்றுடன் மௌனிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த எண்ணத்தைச் சிலர் இன்னமும் தம் உள்ளங்களில் சுமந்து கொண்டிருக்கின்றார்கள்.

எமது மக்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு இங்கு எமது நிலைமையறியாமல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இங்கு இன ஒற்றுமை வளர இடம் கொடுக்க வேண்டும்.

முஸ்லிம் தலைவர்கள் வடகிழக்குக்கு வெளியில் இருந்து வரும் போது அவர்களின் தேர்தல் தொகுதியில் வடகிழக்கு இணைப்பு எடுபடாது என்ற காரணத்தினால் அவர்கள் வட கிழக்கு இணைப்பை எதிர்க்கவே செய்வார்கள்.

முஸ்லிம் தனி அலகொன்றை உறுதி செய்த பின் வடகிழக்கு இணைப்பு பற்றிய கருத்தறியும் பொறிமுறையொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தமிழ்ப் பேசும் மக்களின் பாதுகாப்புக்கும் தனித்துவத்தைப் பேணுவதற்கும் நாம் எடுக்கும் நடவடிக்கைகளில் தெற்கில் உள்ள சிங்கள மக்களை உள்ளடக்க வேண்டும் என்று அரசாங்கத்தில் உள்ள சிலர் எதிர்பார்ப்பது நியாயமான ஒரு கோரிக்கை அன்று.

எமது வருங்காலத்தை நாம் தீர்மானிக்க எமக்கு உரித்து அளிக்கப்பட வேண்டும். ஆகவே சிலருக்கு எரிச்சலை மூட்டுகின்றதோ இல்லையோ எமது பாதுகாப்புக்கும் நாம் தொடர்ந்து இங்கு வாழ்வதற்கும் ஏற்புடைத்தான ஒரு மார்க்கத்தை நாம் வலியுறுத்துவது எந்த விதத்திலும் பிழையாகாது.

இவ்வாறு வடகிழக்கு இணைப்பில்லா இனப்பிரச்சினைத் தீர்வொன்றை நாம் நாடினால் எமது இனம் அழிய அது அடிகோலும் என்பதே உண்மை.” என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

7 comments:

  1. வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமா அல்லது பிரிய வேண்டுமா?

    இந்த தலைப்பு சம்மந்தமாக கீழே பட்டியல் இடப்பட்ட வினாக்கள் கிழக்கு முஸ்லீம்களின் சிந்தனைக்கு.

    * இனவாதம் பிரதான ஆட்சி அம்சமாக உள்ள இக்காலத்தில் வடக்கும் கிழக்கும் இணைவதனால் அல்லது பிரிவதனால் முஸ்லீகளுக்கு ஏற்படக்கூடிய குறுகிய கால, நீண்ட கால நன்மை, தீமைகளை நாம் முறையாக சிந்திக்கின்றோமா?

    * மேற் சொன்ன சிந்தனையின்றி வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு இணையக் கூடாது அல்லது பிரியக் கூடாது என கோசமிட்டுக் கொண்டிருக்கின்றோமா?

    *உணர்சிகளுக்கு அடிமைப்படவில்லை என்றால் அரசியல்வாதிகளின் பிழையான வழி நடத்தல்களினால் அவர்களின் ஆதாயங்களுக்காக நாம் இப்பிரச்சனையின் ஆழம் புரியாது கூட்டத்தோடு கூட்டமாக கோவிந்தா போடுகின்றோமா?

    * வடக்கும் கிழக்கும் இணைவதோ அல்லது பிரிவதோ - இரண்டிலுமே கிழக்கு முஸ்லீகளுக்கு மிகப் பெரியதொரு பங்களிப்பு இருப்பதனையும், இப்பங்களிப்புக்குள்ள பேரம் பேசும் சக்தியையும் நாம் தெளிவாக புரிந்துள்ளோமா?

    * இப் பேரம் பேசும் சக்தியை நமது சமுதாய நன்மைகளுக்காக நாம் எவ்வாறு பயன்படுத்தலாம்?

    இணைவதென்றால் தமிழ் சகோதரர்களுடனும், பிரிவதென்றால் சிங்கள சகோதரர்களுடனும் நாம் பேரம் பேச வேண்டியது காலத்தின் கட்டாயம். எனவே என்ன பேச வேண்டும் என்று நம்மை நாம் தயார் செய்ய வேண்டிய நேரம் இது.

    கிழக்கு முஸ்லீம் புத்தி ஜீவிகளே நம்மிடையே உள்ள பிரதேச வாதங்களையும், அரசியல் வேற்றுமைகளயும் மறந்து நாம் ஒன்று பட்டு சிந்தித்து செயலாற்ற வேண்டிய தருணம் இது. இத்தருணத்தை தவறவிடாது நாம் ஒன்று பட்டு நம் பேரம் பேசும் சக்தியை நல்ல முறையில் பயன்படுத்த முன்வாருங்கள்

    ReplyDelete
  2. இவர் ஒரு பசுத்தோல் போற்றிய புலி... சால்வை போட்ட ஒரு இனவாதி... உமது மக்களின் விருத்தி குறைவுக்கு ஏனைய இனத்தினர் என்ன செய்ய முடியும்... அவர்களின் இயலாமைக்கு நாங்கள் பொறுப்பல்ல... வெளிநாட்டில் பிச்சை எடுத்து ஐரோப்பியர்களாக பம்மாத்து காட்டி இந்நாட்டை காட்டிக்கொடக்கும் உமது மக்களை நாட்டிற்கு வரவழைத்து உமது மக்கள் தொகையை அதிகரித்து கொள்.. தமிழ் மக்களின் அழிவிக்காக அவர்களுக்கு ஏதாவது நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்று தெளிவாக இருந்தோம்.இதற்காக வட கிழக்கு இணைப்பு என்றாலும் கூட பரவாயில்லை என்று நடுநிலையோடு யோசித்தோம்... ஆனால் உன்னைப் போன்ற ஒரு இனவாதி இருக்கும் போது எவ்வாறு எங்களால் அதனை அனுமதிக்க முடியும்? முஸ்லிம் சமுதாயத்தை விற்பனை செய்யும் காங்கிரஸ் காரர்களோ அல்லது முஸ்லிம்களின் காவலர்கள் என தம்பட்டம் அடிக்கும் காங்கிரஸ் காரர்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டு தலையாட்டி பொம்மை போல இருப்பதற்கு நாங்கள் ஒன்றும் அரசியல் அறிவு அற்றவர்கள் என்று நினைக்க வேண்டாம்...

    ReplyDelete
    Replies

    1. இந்த காமேடி தானே வேண்டாம் என்கிறது!. நீங்கள் எப்போதும் தலையாட்டி பொம்மைகள் தான்.

      Delete
    2. வட கிழக்கு இணைப்பு விஷயத்தில் அது தெரியும்...

      Delete
  3. சம்பந்தன் கோஷ்டி இப்போது, புத்த பிக்குமார் முன்னிலையில் தலையாட்டிகளாக வலம் வருகின்றனர்..

    கொஞ்ச நாளைக்கு முன், இனவாதத்தில் ஊறிய விக்கியும், பிக்குமாருக்கு முன்னிலையில் போய். பல்லை இளித்துக்கொண்டு இணைப்பைப்பற்றி முணுமுணுக்க, அவர்கள் இந்த இனவாதிக்குப் பேயறைந்தமாதிரி பதில் சொல்ல, சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று நடையைக் கட்டியிருக்கிறார்.



    ReplyDelete
    Replies
    1. @muslim tna, அது சரி... நீங்கள் தான் கிளி ஜோதிடம் பார்ப்பவர் ஆயிற்றே.

      ஞானசேர பிக்கு வுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எப்போ?

      Delete
  4. கிளி சோதிடம் பார்ப்பது, எப்போதிருந்து பவுலின் சீடர்கள் ஏற்றுக் கொண்டார்கள்?

    பைபிளுக்கும், கிறிஸ்தவத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லாத மனிதர்தான், இயேசு.

    முஸ்லிம்களுக்கோ, முஸ்லிம்களின் இறைத்தூதர் இயேசுவிற்கோ - சோதிடம் என்பது, ஏற்றுக்கொள்ளப்படாததொன்று.

    ReplyDelete

Powered by Blogger.