Header Ads



நீர்­கொ­ழும்­பி­லி­ருந்து கட­லுக்குச் சென்ற 4 பேரை காணவில்லை


நீர்­கொ­ழும்­பி­லி­ருந்து படகில் கட­லுக்குச் சென்ற மீன­வர்கள் அடங்­கிய குழு­வொன்று கடந்த 29 ஆம் திகதி ஆழ் கடலில் விபத்­துக்­குள்ளாகி காணாமல் போயுள்­ள­தாக தெரிய வரு­கி­றது.

சீரற்ற கால­நிலை கார­ண­மாக 'செனுரி துவதருசி புதா' என்ற பெயர் கொண்ட படகில் சென்ற மீன­வர்கள் நான்கு பேரே காணாமல் போயுள்­ளனர். கடந்த  மாதம் 16 ஆம் திகதி  நீர்­கொ­ழும்­பி­லி­ருந்து படகில்  காணாமல் போயுள்ள மீன­வர்கள் தொழி­லுக்கு சென்­றுள்­ளனர். கடந்த 29 ஆம் திகதி முதல் பட­குடன் இருந்த தொடர்பு நின்று போயுள்­ள­தாக துங்­கல்­பிட்­டிய பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. 

கடற்­கரை வீதியைச் சேர்ந்த ஸ்டென்லி ரொட்­ரிகோ (படகு ஓட்­டுநர்) , குடா­பா­டுவ  பிர­தே­சத்தைச் சேர்ந்த நெல்சன் ரொட்­ரிகோ, அஜித் குமார மற்றும் பல­கத்­துறை பிர­தே­சத்தைச் சேர்ந்த லக்மால் ரொட்ரிகோ ஆகியோரே இந்த படகில் தொழிலுக்காக சென்றவர்களாவர்.

No comments

Powered by Blogger.