Header Ads



இலங்கையின் 2 வது தலைநகராக கடவத்தை


இலங்கையின் இரண்டாவது தலைநகராக கடவத்தை நகரம் மாற்றப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

கொழும்பு கண்டி பிரதான வீதியிலுள்ள பிரதான பரிமாற்ற மையமாக கடவத்தை நகரத்தை மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் இலங்கையின் இரண்டாவது தலைநகராக கடவத்தை நகரம் மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக அடுத்த ஆண்டு 2018 ஜனவரி மாதத்தில் இலங்கையின் இரண்டாவது தலைநகராக கடவத்தை நகரத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், 2020ஆம் ஆண்டு இலகு ரயில் சேவை கடவத்தை வரை ஆரம்பிக்கவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.