Header Ads



மஹிந்த ராஜபக்ஷ 1980 இல் செய்த சூழ்ச்சியை, மீண்டும் முன்னெடுக்க முடியாது

சுதந்திர கட்சியை பிளவுப்படுத்தி சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கு எதிராக 1980 ஆண்டில் செய்த சூழ்ச்சியை மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் முன்னெடுக்க முடியாது என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க , கட்சியின் சட்டதிட்டங்களுக்கு எதிராக செயற்படுபவர்களுக்கான நடவடிக்கைகளை பின்னர் அறிவிப்பதாகவும் குறிப்பிட்டார். 

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட வேட்புமனு தாக்கல் இன்று -19- முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். 

 (லியோ நிரோஷ தர்ஷன்)

No comments

Powered by Blogger.