Header Ads



முஸ்லிம்களை மகிந்தவிடம் இருந்து பிரிக்க, தாஜூடீன் மரணத்தை சமூகமயப்படுத்தினர்

ஜனாதிபதியுடன் இணைந்துக்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்தாலும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒரே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் வரை எந்த வகையிலும் அது நடக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை, கதுருவெல பிரதேசத்திற்கு நேற்று பயணம் மேற்கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சியை கைவிட்டு வரும் வரையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடப் போவதில்லை.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாக நாட்டுக்கு எதனையும் செய்யவில்லை.

மக்களின் பிரச்சினைகளை தீர்க்க மகிந்த ராஜபக்சவை விட சிறந்த கொள்கைகள் இருப்பதாக கூறினர்கள். எனினும் அப்படியான நிலைமை இதுவரை ஏற்படவில்லை.

முஸ்லிம் மக்களை மகிந்த ராஜபக்சவிடம் இருந்து பிரிக்க தாஜூடீன் மரண சம்பவத்தை நாட்டுக்குள் சமூகமயப்படுத்தி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினர். அவை அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டுக்கள் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.