Header Ads



ஜிந்தோட்டைக்கு தொடர்ந்து, பாதுகாப்பு வேண்டும் - சட்டத்தரணி பைரூஸ் மரைக்கார்


ஜிந்தோட்ட பகுதிக்கு பொலிஸ் மற்றும் விசே அதிரடிப்ப படை பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட வேண்டுமென அப்பிரசேதத்தைச் சேர்ந்த சட்டத்தரணி பைரூஸ் மரைக்கார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் பேசிய அவர், மேலும் கூறியதாவது,

ஜிந்தோட்டயில் நிலைமை இன்னும் முற்றுமுழுதாக சுமூகமாகவில்லை. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு முற்றிலுமாக திரும்பவில்லை. இந்நிலையில் தொடர்ந்து 2 வாரங்களுக்காவது இப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும்.

எனவே இப்பிரதேச மக்கள், பொலிஸாரும், விசேட அதிடிப்படையினரும் தமது பகுதியில் தொடர்ந்து 2 வாரங்களுக்காகவது நிலை கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட தரப்புகள் கவனம் செலுத்த வேண்டுமென எதிர்பார்க்கின்றனர் என்றார்.

No comments

Powered by Blogger.