இன்றும் ஹர்த்தால், முடங்கியது கல்முனை
(எஸ் .எல். அப்துல் அஸீஸ்)
கல்முனை பிரதேசம் முழுவதும் இன்று -01- புதன் கிழமை கடையடைப்பு, மற்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த ஹர்த்தால் நிகழ்வு காரணமாக கல்முனைப் பிரதேசத்தின் அரசாங்க காரியாலயங்கள், வர்த்தக நிலையங்கள் , பாடசாலைகள் போன்றன மூடப்பட்டுள்ளபோதும் பஸ் போக்குவரத்து சீராக இடம்பெற்று வருவதனை அவதானிக்க முடிகிறது.
நேற்று கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனம் இன்று புதன் மற்றும் நாளை வியாழன் ஆகிய தினம்களில் கடையடைப்பு, மற்றும் ஹர்த்தால் அனுஷ்டிப்புக்கு அழை ப்பு விடுத்ததை தொடர்ந்து இந்த ஹர்த்தால் இடம்பெற்று வருகிறது.
கல்முனை மாநகரசபையை 1987ஆம் ஆண்டு காலப்பகுதில் காணப்பட்டதனை போன்று நான்கு உள்ளுராட்சி சபைகளாகப் பிரித்து, முன்னர் கல்முனை பட்டிண சபையாக இருந்த பிரதேசத்தினை கல்முனை மாநகர சபையாகப் பிரகடனப்படுத்த வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தும் நோக்கில் இந்த ஹர்த்தால் இடம்பெருவதாக அனைத்து பள்ளிவாயல்கள் மற்றும் பொது நிறுவனம்களின் சம்மேளனத்தின் தலைவர் வைத்திய கலாநிதி எஸ்.எம்.ஏ. அஸீஸ் தெரிவித்தார்.
Post a Comment