Header Ads



பறிபோகும் அப்பாவி, மக்களின் காணிகள்


திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் வாழும் முஸ்­லிம்கள் பல்­வேறு வித­மான காணிப் பிரச்­சி­னை­க­ளுக்கும் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கும் தொடர்ச்­சி­யாக முகங்­கொ­டுத்து வரு­கின்­றனர். தற்­போது  மூதூர் மலைப் பகு­தியை அண்­டிய மூதூர் கட்­டை­ப­றிச்சான் (தெற்கு) சந்­த­ன­வெட்டை பகு­தியில் வாழும் முஸ்­லிம்­களும் இத்­த­கைய பிரச்­சினை ஒன்றைச் சந்­தித்­துள்­ளனர்.

முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான இப் பகுதி காணிகள் வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­க­ளத்­திற்குச் சொந்­த­மான காணி­யென்றும் இப் பிர­தே­சத்தில் குடி­யி­ருப்­போரும் பயிர்ச் செய்­கையில் ஈடு­ப­டு­வோ­ரையும் வெளி­யே­று­மாறும் அதி­கா­ரிகள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளனர். 
அத்­துடன் இதனை மீறும் பட்­சத்தில் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­துவோம் என்றும் மூதூர் வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­கள அதி­கா­ரிகள் தங்­களை அச்­சு­றுத்­தி­யுள்­ள­துடன்  பயிர்ச் செய்­கையில் ஈடு­பட்ட மூன்று விவ­சா­யிகள் கடந்த புதன்­கி­ழமை கைது செய்­யப்­பட்டு மூதூர் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு பின்னர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர்.

மூதூர் சந்­த­ன­வெட்டை மலை­யடிப் பகு­தியில் முன்னாள் பிர­தமர் சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்­காவின் காலப்­ப­கு­தியில் 1970 ஆம் ஆண்டு மூதூர் முஸ்­லிம்­க­ளுக்கு 63 ஏக்கர் காணிகள் பயிர் செய்கை மேற் கொள்­வ­தற்­காக பகிர்­த­ளிக்­கப்­பட்­டுள்­ளது. 1985 காலப்­ப­கு­தியில் போர்ச் சூழல் கார­ண­மாக இங்­கி­ருந்து இடம்­பெ­யர்ந்து சென்று யுத்தம் நிறை­வ­டைந்­ததும் 2009 ஆம் ஆண்டு மீண்டும் தங்­க­ளது பாரம்­ப­ரிய காணி­க­ளுக்குச் சென்று பெரும் செல­வு­களை மேற் கொண்டு இன்று வரை சோளம், நிலக்­க­டலை, வேளாண்மை போன்ற பயி­ரி­னங்­களை செய்து வரு­கின்­றனர். இந் நிலை­யி­லேயே 7 வரு­டங்­களின் பின்னர் இம் மக்­களை இங்­கி­ருந்து வெ ளியே­று­மாறு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

எனினும் இப் பகு­தியில் கல் உடைக்கும் தொழில் செய்வோர் குறித்த காணி­களை தமது வியா­பார நட­வ­டிக்­கை­க­ளுக்கு பயன்­ப­டுத்தும் நோக்­கி­லேயே அதி­கா­ரி­களைப் பயன்­ப­டுத்தி இம் மக்­களை அச்­சு­றுத்தி வெ ளியேற்ற முனை­வ­தாக இம் மக்கள் குறிப்­பி­டு­கின்­றனர். 
இவ்­வா­றான அச்­சு­றுத்­தல்கள் தொடர்­கின்ற அதே வேளை  திட்­ட­மிட்ட சிங்­க­ள­ம­ய­மாக்­கலும் அங்கு தொடர்ந்து வரு­கி­றது. தமி­ழர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் சொந்­த­மான காணி­களில் புத்தர் சிலைகள் வைக்­கப்­பட்டு அவற்றை ஆக்­கி­ர­மிக்கும் திட்­ட­மிட்ட நட­வ­டிக்­கைகள் முன்­கொண்டு செல்­லப்­ப­டு­கின்­றன. 

திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் இவ்­வாறு முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான ஆயிரக் கணக்­கான ஏக்கர் காணிகள் அச்­சு­றுத்­தல்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளன. எனினும் இந்த அச்­சு­றுத்­தல்­க­ளி­லி­ருந்து மக்­களைப் பாது­காப்­ப­தற்கோ இவர்கள் சார்பில் முன்­னின்று செயற்­பட்டு தீர்வைப் பெற்றுக் கொடுக்க எந்­த­வித அர­சியல் பிர­தி­நி­தி­களும் முன்­வ­ரு­வ­தாகத் தெரி­ய­வில்லை. 

 திரு­மலை மாவட்ட  முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை தொடர் கதையாகிக் கொண்டே செல்கிறது. இவற்றை பிரதேச, மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் தீர்ப்பதற்கான முறையான வேலைத்திட்டங்களும் நம் கைகளில் இல்லை என்பது துரதிஷ்டவசமானதாகும். இது தொடர்பில் அரசியல் மற்றும் சிவில் சமூக தலைமைகள் தீவிர கரிசனை செலுத்த முன்வர வேண்டும்.

-விடிவெள்ளி பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்-

8 comments:

  1. If it is designated area, then muslims should depart from the place

    ReplyDelete
  2. இவைகளை பார்க்க, முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கு நேரம் இல்லை.

    இவர்கள் இப்போது ஒரே பிசி.

    ReplyDelete
  3. வனஜீவராசியென்ற பெயரில் காணியைக்கொள்ளையிடும் அரச மாபியாக்கள்

    ReplyDelete
  4. தப்பிப் பிறந்து ஆத்தாவால் கைவிடப்பட்டு மனநோயாளியாக கண்டகண்ட இடங்களில் மூக்கை நுழைத்து அடிபட்டு மண்டையில் விசர் ஏறி உலாவரும் அனுஷாத் சந்த்ரபால் என்பவனைக் கண்டால் 119 க்கு அறிவியுங்கள். அல்லது அவனது பிறப்புக்கு காரணமான அந்த விபச்சாரகனிடம் ஒப்படையுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. How many wives your father have?? 07 right. So judge now who is the rapist and it's your father,
      Atleast you can marry a wiman show this world tgat islam is fake and we always welcome you to join in Hinduism.

      Delete
    2. Thasarathan has how many wives? Just search pornography in Hinduism.

      https://m.indiatimes.com/culture/who-we-are/14-temples-in-india-where-you-get-a-lot-more-than-just-the-traditional-prasad-231878.html

      Delete
  5. காணி உறுதிகள் எங்கே?,
    அது தொலைந்து விட்டால், சட்டத்தரணி ஊடாக காணி கச்சேரியில் பெறலாம். சட்ட பூர்வமான உறுதிகள் இருந்தால் உங்கள் காணிகள் உங்களுக்கே.

    ஆனால், இது கூட இல்லா விட்டால், நீங்கள் கள்ள வேலை செய்கிறீர்கள் என அர்த்தம்.
    இப்படியானவர் இப்பபொது பலர் (சில தமிழர்களும் தான்) வட கிழக்கில் திரிகின்றனர். பொலிஸ் ஏன் இவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வில்லை?

    ReplyDelete
  6. 1970 இல் இருந்து முஸ்லிம்கள் அவ்விடத்தில் இருக்கிறார்கள்.

    அரசாங்கத்தால் வழங்கப்பட்ட காணிகளில் அவர்கள் இருக்கிறார்கள் - காணி உறுதியுடன்.

    ReplyDelete

Powered by Blogger.