பறிபோகும் அப்பாவி, மக்களின் காணிகள்
திருகோணமலை மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்கள் பல்வேறு விதமான காணிப் பிரச்சினைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் தொடர்ச்சியாக முகங்கொடுத்து வருகின்றனர். தற்போது மூதூர் மலைப் பகுதியை அண்டிய மூதூர் கட்டைபறிச்சான் (தெற்கு) சந்தனவெட்டை பகுதியில் வாழும் முஸ்லிம்களும் இத்தகைய பிரச்சினை ஒன்றைச் சந்தித்துள்ளனர்.
முஸ்லிம்களுக்குச் சொந்தமான இப் பகுதி காணிகள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்குச் சொந்தமான காணியென்றும் இப் பிரதேசத்தில் குடியிருப்போரும் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவோரையும் வெளியேறுமாறும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் இதனை மீறும் பட்சத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம் என்றும் மூதூர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தங்களை அச்சுறுத்தியுள்ளதுடன் பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட மூன்று விவசாயிகள் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டு மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மூதூர் சந்தனவெட்டை மலையடிப் பகுதியில் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் காலப்பகுதியில் 1970 ஆம் ஆண்டு மூதூர் முஸ்லிம்களுக்கு 63 ஏக்கர் காணிகள் பயிர் செய்கை மேற் கொள்வதற்காக பகிர்தளிக்கப்பட்டுள்ளது. 1985 காலப்பகுதியில் போர்ச் சூழல் காரணமாக இங்கிருந்து இடம்பெயர்ந்து சென்று யுத்தம் நிறைவடைந்ததும் 2009 ஆம் ஆண்டு மீண்டும் தங்களது பாரம்பரிய காணிகளுக்குச் சென்று பெரும் செலவுகளை மேற் கொண்டு இன்று வரை சோளம், நிலக்கடலை, வேளாண்மை போன்ற பயிரினங்களை செய்து வருகின்றனர். இந் நிலையிலேயே 7 வருடங்களின் பின்னர் இம் மக்களை இங்கிருந்து வெ ளியேறுமாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இப் பகுதியில் கல் உடைக்கும் தொழில் செய்வோர் குறித்த காணிகளை தமது வியாபார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் நோக்கிலேயே அதிகாரிகளைப் பயன்படுத்தி இம் மக்களை அச்சுறுத்தி வெ ளியேற்ற முனைவதாக இம் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறான அச்சுறுத்தல்கள் தொடர்கின்ற அதே வேளை திட்டமிட்ட சிங்களமயமாக்கலும் அங்கு தொடர்ந்து வருகிறது. தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சொந்தமான காணிகளில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டு அவற்றை ஆக்கிரமிக்கும் திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்கொண்டு செல்லப்படுகின்றன.
திருகோணமலை மாவட்டத்தில் இவ்வாறு முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஆயிரக் கணக்கான ஏக்கர் காணிகள் அச்சுறுத்தல்களுக்குள்ளாகியுள்ளன. எனினும் இந்த அச்சுறுத்தல்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கோ இவர்கள் சார்பில் முன்னின்று செயற்பட்டு தீர்வைப் பெற்றுக் கொடுக்க எந்தவித அரசியல் பிரதிநிதிகளும் முன்வருவதாகத் தெரியவில்லை.
திருமலை மாவட்ட முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை தொடர் கதையாகிக் கொண்டே செல்கிறது. இவற்றை பிரதேச, மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் தீர்ப்பதற்கான முறையான வேலைத்திட்டங்களும் நம் கைகளில் இல்லை என்பது துரதிஷ்டவசமானதாகும். இது தொடர்பில் அரசியல் மற்றும் சிவில் சமூக தலைமைகள் தீவிர கரிசனை செலுத்த முன்வர வேண்டும்.
If it is designated area, then muslims should depart from the place
ReplyDeleteஇவைகளை பார்க்க, முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கு நேரம் இல்லை.
ReplyDeleteஇவர்கள் இப்போது ஒரே பிசி.
வனஜீவராசியென்ற பெயரில் காணியைக்கொள்ளையிடும் அரச மாபியாக்கள்
ReplyDeleteதப்பிப் பிறந்து ஆத்தாவால் கைவிடப்பட்டு மனநோயாளியாக கண்டகண்ட இடங்களில் மூக்கை நுழைத்து அடிபட்டு மண்டையில் விசர் ஏறி உலாவரும் அனுஷாத் சந்த்ரபால் என்பவனைக் கண்டால் 119 க்கு அறிவியுங்கள். அல்லது அவனது பிறப்புக்கு காரணமான அந்த விபச்சாரகனிடம் ஒப்படையுங்கள்.
ReplyDeleteHow many wives your father have?? 07 right. So judge now who is the rapist and it's your father,
DeleteAtleast you can marry a wiman show this world tgat islam is fake and we always welcome you to join in Hinduism.
Thasarathan has how many wives? Just search pornography in Hinduism.
Deletehttps://m.indiatimes.com/culture/who-we-are/14-temples-in-india-where-you-get-a-lot-more-than-just-the-traditional-prasad-231878.html
காணி உறுதிகள் எங்கே?,
ReplyDeleteஅது தொலைந்து விட்டால், சட்டத்தரணி ஊடாக காணி கச்சேரியில் பெறலாம். சட்ட பூர்வமான உறுதிகள் இருந்தால் உங்கள் காணிகள் உங்களுக்கே.
ஆனால், இது கூட இல்லா விட்டால், நீங்கள் கள்ள வேலை செய்கிறீர்கள் என அர்த்தம்.
இப்படியானவர் இப்பபொது பலர் (சில தமிழர்களும் தான்) வட கிழக்கில் திரிகின்றனர். பொலிஸ் ஏன் இவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வில்லை?
1970 இல் இருந்து முஸ்லிம்கள் அவ்விடத்தில் இருக்கிறார்கள்.
ReplyDeleteஅரசாங்கத்தால் வழங்கப்பட்ட காணிகளில் அவர்கள் இருக்கிறார்கள் - காணி உறுதியுடன்.