Header Ads



புத்தளம் பஸ் விபத்தில், மொஹமட் உஸாமா வபாத்தானார்


கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த புத்தளம் மதுரங்குளி பஸ் விபத்தில் இன்று (06)காலை  8.15 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் முள்ளிப்பொத்தானை சிராஜ் நகரைச் சேர்ந்த சகீர் மொஹமட் உஸாமா வயது(22) உயிரிழந்துள்ளார்.10 ம் கட்டைக்கும் மதுரங்குளிக்கும் இடையிலேயே இவ் விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர் .

முச்சக்கரவண்டியொன்றை முந்தும்போதே வேகக் கட்டுப்பாட்டை இழந்து இவ் விபத்து இடம்பெற்றதாகவும் அதில் பயணித்த மேலும் நான்கு பேர்  உட்பட மொத்தமாக ஐந்து பேர் பலியானதுடன் 45 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.முள்ளிப் பொத்தானை தாருஸ்ஸலாம் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றும் மௌலவி சகீர் என்பவரின் மூத்த மகனான உஸாமாவே இவ்வாறு விபத்தில் வபாத்தாகியுள்ளார்.ஜனாஸா புத்தளத்தில் இருந்து முள்ளிப்பொத்தானைக்கு கொண்டு வர இருப்பதாகவுப் பெற்றார் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.