Header Ads



கிந்தோட்டையில் பாதுகாப்பு படைகளே, முன்னின்று தாக்குதல் நடாத்தியுள்ளனர் - மு.மு.மு.

கிந்தோட்டையில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்திய பாதுகாப்பு படை வீரர்களுக்கு நல்லாட்சி அரசு விருது வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இலங்கையின் பாதுகாப்பு படையானது இவ்வரசின் கைக்கூலிகள் போன்று நடந்து கொள்வதை பல விடயங்கள் மூலம் அறிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது. 

ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம், சைட்டம் ஆர்ப்பாட்டம் உட்பட பல தங்களுக்கு சவாலான விடயங்கள் பொலிசை பயன்படுத்தியே இவ்வரசு முடிவுக்கு கொண்டு வர முயற்சித்தது.

இது போன்ற பல விடயங்களில் இலங்கை பாதுகாப்பு படையானது நாட்டின் நலனை கருத்தில் கொள்ளாது இவ்வரசை பாதுகாப்பதை மையப்படுத்தியே செயற்பட்டது எனலாம்.

இறுதியில் அவர்களை கண்டிப்பதாக மாறுதல் வழங்குதல் போன்ற ஏதாவது ஒன்றை அவர்களுடன் பேசி செய்துவிட்டு வேறு வகையில் அவர்களை கௌரவித்து மக்களை ஏமாற்றுவார்கள்.

அண்மையில் ஊடகவியலாளரை தாக்கிய கடற்படைத் தளபதிக்கு பதவிக்காலத்தை நீடித்து கைமாறு செய்தது இந்த அரசு.ஹம்பாந்தோட்டையில் கன்னத்தில் அறைந்தை பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்றம் வழங்கி கண்துடைப்பு செய்தது.

கிந்தோட்டையில் பாதுகாப்பு படை வீரர்களே முன்னின்று தாக்குதல் நடாத்தியுள்ளனர். இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசு தவறினால் இதனை நிச்சயமாக இவ்வரசின் திட்டமிட்ட செயற்பாடாகவே நாம் பார்க்கவேண்டும்.

முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்திய பாதுகாப்பு படையினருக்கு தனது பரிசாக என்ன விருது வழங்கப் போகிறதோ தெரியவில்லை.கடந்த காலங்களிலை முஸ்லிம்கள் மீது பெரும் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்ட பொது பல சேனா அமைப்பை சேர்ந்தவர்களுக்கு சு.கவின் அமைப்பாளர் போன்ற முக்கிய பதவிகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அ அஹமட்
ஊடக செயலாளர்
முஸ்லிம் முற்போக்கு முன்னனி 

1 comment:

  1. முஸ்லிம் பிற்போக்கு முன்னனியின் ஊடக செயலாளர் அவர்களே உங்களைப்போன்ற எச்சைப்பொறுக்களுக்கு இன்னுமா விளங்கவில்லை?
    இதற்கு முன் நடந்த அளுத்கம , மாவனல்லை சம்பவங்களிலும் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் தான் தாக்குதல் நடந்தேரின.
    இன்னும் இப்படியே சொற்ப இலாபங்களுக்காக அந்த முன்னனி இந்த முன்னனி என்று முஸ்லிம்களை பிளவுபடுத்தி பலவீனமான சமூகமாகமாற்றிக்கொண்டிருங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.