சுகாதார சேவைகள் மற்றும் உயிர் பாதுகாப்புக்கு சிறந்த நாடுகளில் இலங்கைக்கு 34 வது இடம்
உலகில் 144 நாடுகளில் சுகாதார சேவைகள் மற்றும் உயிர் பாதுகாப்புக்கு சிறந்த நாடுகளில் இலங்கை 34 வது இடத்தை பிடித்துள்ளது.
சர்வதேச பொருளாதார ஒன்றியம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கைக்கு அமைய இலங்கை இந்த 34 நாடுகளுக்குள் வந்துள்ளது.
உலக ஆண், பெண் சமூக நிலை தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள ஒன்றியம் வெளியிட்டுள்ள தி குளோபல் ஜென்டர் கேப் ரிப்போர்ட் 2017 என்ற அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மருத்துவ நிர்வாகிகள் சங்கத்தின் அறிவியல் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அண்மையில் நடைபெற்றதுடன் அங்கு சுகாதார அமைச்சர் ராஜித சிறிசேன இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
Post a Comment