"பிரபாகரனை நினைவுகூர்வோர், 30 வருட அழிவுகளை பொறுப்பேற்க வேண்டும்"
சிவாஜிலிங்கம் போன்றோர் பிரபாகரனை நினைவுகூர்வார்களேயானால் 30 வருட யுத்தத்தில் நாட்டுக்கும், மக்களுக்கும் ஏற்பட்ட அழிவுகளை அவர்களே பொறுப்பேற்க வேண்டுமென அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
படையினரால் அந்தப் பிரதேசம் மீட்கப்பட்டதாலே சிவாஜிலிங்கம் போன்றோர் வடக்கில் அரசியல் செய்கின்றனர். எனவே படையினர் நினைவாகவே சிவாஜிலிங்கம் போன்றோர் மாவீரர் தினம் நடத்த வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அமிர்தலிங்கம் முதல் யோகேஸ்வரன் போன்ற தமிழ் தலைவர்களைக் கொலை செய்தது சிங்கள மக்களோ அல்லது இராணுவமோ அல்லவெனக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் எல். ரி. ரி. ஈ. யினாலேயே தமிழ் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டதாக தெரிவித்தார். இதனை எவரும் மறந்து விடக்கூடாது என்றும் அமைச்சர் தெரிவித்தார். தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பின் உறுப்பினர்களுக்காக நினைவு நினைம் அனுஷ்டிக்க ஏற்பாடு செய்யப்படுமானால் அத்தகையோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுபோன்ற ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இடமளிப்பதானது, தீவிரவாதத்துக்கு இடமளிப்பது போன்றதாகுமெனக் குறிப்பிட்ட அமைச்சர், பயங்கரவாதிகளை வீர்களாக அனுஷ்டிக்கும் அனைவரும் பயங்கரவாதிகளாகவே இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
எல் ரீ. ரீ. ஈ. இயக்கமானது நிராயுதபாணிகளான அப்பாவிப் பொதுமக்களை பெருமளவில் கொன்று வீதிகளில் போட்டதை நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவோர் நினைவிற்கொள்ள வேண்டும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment