Header Ads



கனடாவுக்கு செல்ல முற்பட்டதாக 26 பேர் புத்தளத்தில் கைது

சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்ல முற்பட்டதாக கூறப்படும் 26 பேர் புத்தளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்கள் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள் எனத் தெரியவந்துள்ளது. 

புத்தளம் பகுதியிலுள்ள இடமொன்றில் இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, இந்த சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இதேவேளை, கைதுசெய்யப்பட்ட ஆண்கள் தவிர்த்து பெண்களும் இவ்வாறு செல்ல முற்பட்டுள்ளனரா? அவ்வாறாயின் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளது எங்கு என்பது தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

No comments

Powered by Blogger.