Header Ads



25 பாதாள உலக முக்கியஸ்தர்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோட்டம்

நாட­ளா­விய ரீதியில் பல்­வேறு குற்றச் செயல்­க­ளுடன் தொடர்­பு­டைய பாதாள உலகக் குழுக்­களைச் சேர்ந்த தலை­வர்கள் உட்­பட 25 பேர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்­றுள்­ளமை விசா­ர­ணைகள் ஊடாக தெரி­ய­வந்­துள்­ளது.

பொலி­ஸாரின் தேடுதல் வேட்டை மற்றும் எதிர் பாதாள குழு­வி­னரால் ஏற்­பட்­டுள்ள உயிர் அச்­சு­றுத்தல் கார­ண­மா­கவே இவர்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்­றுள்­ள­தா­கவும் அவர்­களை கைது செய்­வ­தற்­கான திட்டம் வகுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

அண்­மைக்­கா­ல­மாக பாதாள உலக செயற்­பா­டுகள் அதி­க­ரித்­துள்ள நிலையில், முக்­கி­ய­மான பாதாள உலக தலை­வர்கள் பலர் நாட்­டை­விட்டு தப்பிச் சென்­றி­ருந்த போதும் அவர்­க­ளது சகாக்கள் ஊடாக இங்கு குழு மோதல்­களை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றமை தெரி­ய­வந்­துள்ள நிலை­யி­லேயே அடை­யாளம் காணப்­பட்­டுள்ள பல பாதாள உலக தலை­வர்­க­ளுக்கு எதி­ராக நீதி­மன்­றங்கள் ஊடாக சிவப்பு அறி­வித்­தல்­களைப் பெற்­றுக்­கொள்ள பொலிஸ் தலை­மை­யகம் தீர்­மா­னித்­துள்­ள­தாக அந்த அதி­காரி சுட்­டிக்­காட்­டினார்.

(எம்.எப்.எம்.பஸீர்)

No comments

Powered by Blogger.