Header Ads



24 மாநகர, 41 நகர, 276 பிரதேச சபைகளுக்கு தேர்தல் - 8,356 உறுப்­பி­னர்கள் தெரி­வு­

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான் வர்த்­த­மானி அறி­வித்தல் நேற்று வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. 

அதற்­கி­ணங்க 4,840 தொகு­திகள் வகுக்­கப்­பட்­டுள்­ள­துடன், 341 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

இவற்­றுக்கு 8,356 உறுப்­பி­னர்கள் தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.

இதே­வேளை இறு­தி­யாக விகி­தா­சார முறையில் நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலின் போது நாட்டில் முன்­னூற்று முப்­பத்­தைந்து உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் இருந்­த­துடன் அம்­ மன்­றங்­க­ளுக்கு நான்­கா­யி­ரத்து நானூற்று எண்­பத்­தாறு உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­பட்­டனர்.

ஆகவே புதிய தேர்தல் முறை ஊடாக நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் கடந்த தேர்­த­லை­விட ஆறு உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் மேல­தி­க­மாக உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.

அதற்­கி­ணங்க அக­ரப்­பத்­தனை, கொட்­ட­கலை, மஸ்­கெ­லியா, நோர்வூட், பொலன்­ன­றுவை ஆகிய பிர­தேச சபைளும் பொலன்­ன­றுவை மாந­கர சபை­யுமே புதிய உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

எனவே தற்­போது நாட்டில் மொத்­த­மாக இரு­நூற்று எழு­பத்­தாறு பிர­தேச சபை­களும், 24 மாந­கர சபை­களும், நாற்­பத்­தொரு நக­ர­ச­பை­க­ளு­மாக பிரிக்­கப்­பட்­டுள்­ளன.

ஒவ்­வொரு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கும் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்ள உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை குறித்த வர்த்­த­மா­னியில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

(எம்.சி.நஜி­முதீன்)

No comments

Powered by Blogger.