சீரற்ற காலநிலை, 23 பேரை காணவில்லை
கடற்றொழிலாளர்கள் உள்ளிட்ட 23 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 3 பேரும், காலி மாவட்டத்தில் 10 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 10 பேரும் காணாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடலுக்கு சென்ற 3 மீனவ படகுகள் காணாமல் போயுள்ளதாக மீன்பிடிதுறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு மீன்பிடி திணைக்களம் கோரியுள்ளது
Post a Comment