தாமரை மொட்டுடன் வருகிறார் மகிந்த, 12 ஆம் திகதி பிரச்சாரம் ஆரம்பம்
மகிந்த ராஜபக்சவின் தலைமையில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகள் ஆரம்பமாகவுள்ளன.
வரும் 12ஆம் நாள் புனித நகரான அனுராதபுரவில் உள்ள சல்காடோ மைதானத்தில் முதலாவது பரப்புரைக் கூட்டம் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
கூட்டு எதிரணியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன், இந்தக் கூட்டத்திலும் பங்கேற்கவுள்ளனர் என்று அந்தக் கட்சியின் பரப்புரைப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமன்ன தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன முன்னணி நாடு முழுவதிலும் தாமரை மொட்டு சின்னத்தில் தனித்துப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மொக்காமண்டயா பெசில் நஞ்சிக்கு என்ன பெயரை மாற்றி வைத்தாலும் அது நஞ்சிதாண்டா இதற்கு முன்பு நீங்கள் இரண்டு தேர்தல்களில் தோற்றுபோனீர்கள் அப்போதும் இந்த எதுக்கும் உதவாத கூட்டு எதிர்கட்சி தலைவர்களும் அல்லக்கைகளும் உன் குடும்பத்துடன்தான் இருந்தார்கள் மறந்திட்டியா? ஏண்டா களவு எடுத்தது போதாதா இன்னும் எத்தனை உயிர்களைடா கடத்தி கொலை செய்ய முயற்சிக்கின்றீர்கள்!?
ReplyDelete