Header Ads



புத்தளம் இளைஞரின் ஜனாஸா, கொத்மலை நீர்தேக்கத்தில் மீட்பு


தலவாக்கலை நகரில் கடந்த 17ம் திகதி காணாமல்போன 18 வயதுடைய இளைஞன் இன்று (21) மதியம் மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். 

உயிரிழந்தவர் புத்தளம் கந்தகுடா பகுதியைச்சேர்ந்த முகமது நிலாம்தீன் முகம்மது அஸ்ஜட் வயது 18 என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

ஆற்றில் சடலமொன்று மிதந்து கொண்டிருப்பதாக பிரதேச மக்களால் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை எடுத்தனர். 

தலவாக்கலை பகுதிக்கு வருகைதந்து 

தலவாக்கலை நகரசபையின் கடையொன்றினை வாடகைக்கு பெற்று ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த மேற்படி இளைஞர், கடந்த 17 ம் திகதி இரவு கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் 18.10.2017 அன்று வரை வருகை தராதமையினால் கடை உரிமையாளரினாலும், சக ஊழியர்களினாலும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இவரது புகைப்படத்துடன் காணவில்லையென செய்திகளும் ஊடகங்களின் மூலமாக வெளியாகியிருந்தன. 

எனினும் அடையாளம் காணாத நிலையில் 21.10.2017 அன்று பிரதேசவாசிகள் சடலத்தை கண்டு அறிவித்ததையடுத்தே சடலம் கண்டெடுக்கப்பட்டது. 

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

1 comment:

  1. إنا لله وإنا إليه راجعون. ..
    اللهم اغفرله ورحمه وادخل الجنة

    ReplyDelete

Powered by Blogger.