Header Ads



அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை நாட்டைப் பிளவுபடுத்தும் - ஜனாதிபதியிடம் விமல் வலியுறுத்து


புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மைத்திரிபால சிறிசேனவிடம், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக மைத்திரிபால சிறிசேனவை, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன் போதே, இடைக்கால அறிக்கையை அமைச்சரவை அங்கீகரிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறு விமல் வீரவன்ச கோரியுள்ளார்.

இடைக்கால அறிக்கை நாட்டைப் பிளவுபடுத்தும் என்றும்  இந்தச் சந்திப்பின் போது விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னதாக, அனைத்து அரசியல் கட்சிகளினதும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.