Header Ads



ரணிலை பாதுகாக்கக் கூடாது - வாசுதேவ போர்க்கொடி

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடிகள் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு, அது தொடர்பான அனைத்து தகவல்களையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்க வேண்டும் என, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

பொரளையில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெகு விரைவில் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகி சாட்சியம் வழங்குவார் என்றும் சட்டமா அதிபர் திணைக்களம் அவரை பாதுகாக்க மாட்டாதென, மக்கள் எதிர்பார்த்துள்ளதாகவும், அவர் இதன்போது கூறினார்.


1 comment:

  1. பிரதமருக்கு எதிராக சொந்தக் கோபத்தைக் கக்கித் தீர்க்கும் சந்தர்ப்ப வாதியும் அரசியல் வங்கரோத்துக்காரரும் இவர்தான்.

    ReplyDelete

Powered by Blogger.