Header Ads



முஸ்லிம்களுக்கான சம்பந்தனின் அழைப்பும், பதிலும்...!!


-Dr.Yoosuff-

வடகிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம்கள் ஒத்துழைக்க வேண்டுமாம். சம்பந்தன் ஐயா அவர்கள் கூறுகிறார்கள். வடகிழக்கின் முதலமை‌ச்ச‌ர் பதவியையும் வழங்கத்தயாராம்.

கௌரவ ஐயா அவர்களுக்கு எனது கருத்துக்களை பணிவன்புடன் முன்வைக்கிறேன். 

சுவர் இல்லாமல் சித்திரம் கீறவுமுடியாது. அத்திவாரம் இல்லாமல் கட்டிடம் கட்டவுமுடியாது. அதேபோன்றுதான் இரு சமூகத்தின் மத்தியிலும் யுத்தம் ஏற்படுத்திய பாரிய கசப்பான மநோநிலையை சீர்செய்து சந்தேகங்கள் இல்லாதொழிக்கப்பட்டு சுமூகமான சூழ்நிலை உருவாகும் வரை உங்கள் இணைப்பு கைகூடாதையா.

முதலமைச்சர் பதவியை வைத்து இரு சமூகங்களுக்கிடையிலும் அதிகார சமாந்தரத்தை ஏற்படுத்த முடியுமென எங்களை நம்பவைக்க முயற்சிக்கிறீர்களா இல்லை நிரந்தரமாக இந்த முஸ்லிம் முதலமைச்சர் நிலையை சட்டபூர்வமாக உறுதி செய்ய முடியும் என்று கூறவருகிறீர்களா இல்லை எங்கள் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இலஞ்சத்திற்கு அடிமையானதுபோல் முஸ்லிம் சமூகமும் முதலமை‌ச்ச‌ர் எனும் இலஞ்சத்திற்கு அடிமையாகிவிடுவார்கள் என நம்புகிறீர்களா? புரியவில்லை ஜயா உங்கள் வேண்டுகோள். 

முடியுமானால் கிழக்கில் மாத்திரம் சர்வஜனவாக்கெடுப்பை நடாத்தி பெரும்பான்மை தமிழ் சமூகத்தை மட்டுமாவது இணைப்புக்கு உடன்படுகிறார்கள் என நிரூபித்து விட்டு முஸ்லிம் சமூகத்திடம் இதுபற்றி பேச வாருங்கள்.

ஓட்டைச்சட்டியை பஞ்சால் அடைத்தாலும் சரி சீமெந்தால் அடைத்தாலும் சரி அது இயற்கையான மண்சட்டியின் தன்மையை ஒருபோதும் கொண்டிராது, அதுபோலவே மனங்கள் இணையாது மாகாணங்களை இணைத்து நிம்மதியான சகவாழ்வு ஏற்படாதையா என்பதனை இவ்வளவு அனுபவமிக்க உங்களுக்கு கூறிவைப்பதில் கவலையடைகிறேன் எனக்கூறி முடிக்கிறேன் 

2 comments:

  1. கிழக்குமாகாணம் தனித்திருந்தாலும் முஸ்லீம்கள் முதலமைச்சர் ஆவதுகடினம்.வடகிழக்கில் இருமுதமைச்சர் முறையில் ஒருமுதலமைச்சர் ஒரு துணைமுதலமைச்சர் என இருசமுகமுதமைச்சர்களை வழங்கும் பரிசீலனையை த.தே.கூ எப்பவோ முன்வைத்தது.அதிகாரம்மிக்க நிலையான தூனைமுதல்வர் பதவி அதுவும் அகண்ட வடகிழக்கின் தூணைமுதல்வராக முஸ்லீம் கள்திகழ்ந்திருக்கலாம்.நிரந்தரமற்ற முதலமைச்சர் பதவிக்கு அது மேலானது.
    முஸ்லீம் அரசியல்வாதிகளின் பிரச்சினை இதுவல்ல தமிழர் பிரச்சினை தீரக்கூடாது தீர்ந்தால் அவர்கள் அமைச்சுக்கு ஆபத்து.கிழக்கின் முதலமைச்சரல் வடக்கின் முஸ்லீம்களுக்கு என்பயன்??
    வடகிழக்கின் துணைமுதல்வரால் யாழ்பாணம்.சாவச்சேரி முசலி முஸ்லீம்கள் என எல்லாமுஸ்லீமூம் நன்மை பெறலாம்.

    ReplyDelete
  2. இலங்கையின் 1/3பரப்பை தமது மாநிலமென சிறுபான்மையினர் கூற வழி சொன்னால்.கிழக்கை சிங்களவனுக்கு தாரைவார்கக முஸ்லீம்கள் வழி சொல்கின்றனர்.!

    ReplyDelete

Powered by Blogger.