பிரித்தானியாவில் இரட்டை குட்டிபோட்ட சிறுத்தை - மிருகக்காட்சிசாலை நிர்வாகம் மிகுந்த மகிழ்ச்சி
பிரித்தானியாவிலுள்ள Banahm மிருகக்காட்சி சாலையில் இலங்கை சிறுத்தை ஒன்று இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது.
இலங்கை சிறுத்தையான சரிஸ்கா நீண்ட காலத்தின் பின்னர் Banahm மிருகக்காட்சி சாலையில் முதல் முறையாக இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது.
புதிய சிறுதைகளின் வரவினால் Banahm மிருகக்காட்சி சாலை நிர்வாகம் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.
பெண் சிறுத்தை சரிஸ்காவுடன் ஆண் சிறுத்தை மியாஸ் இணைவதென்பது இலகுவான விடயமாக காணப்படவில்லை. எனினும் மியாஸ் இனப்பெருக்கம் செய்யத் தயங்கவில்லை.
ஆனால் இறுதியில் இணைப்பு நடந்துள்ளது. தற்போது இரண்டு சிறுத்தை குட்டிகளும் ஆரோக்கியமாக உள்ளதென மிருகக்காட்சி சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், துரதிர்ஷ்ட வசமாக 1000க்கும் அதிமாக இலங்கை சிறுத்தைகள் தங்கள் குட்டிகளை காட்டில் விட்டுச் செல்வதாக தெரியவந்துள்ளது.
Post a Comment