Header Ads



விக்னேஸ்வரன் வாய் திறந்தால், இனவாத கருத்துகள் மாத்திரமே வெளிவருகின்றது - ருவன்

விக்னேஸ்வரன் வாய்  திறந்தால்  இனவாத கருத்துகள் மாத்திரமே வெளிவருகின்றது. அவர் எதைக் கூறினாலும் வடக்கின் கருத்துகளுக்கு அமைய அரசாங்கம் தீர்மானம் எடுக்கப்போவதில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். 

வடக்கில் நீண்டகால யுத்தம் இடம்பெற்றுள்ள நிலையில் வடக்கில் இருந்து ஒருபோதும் இராணுவத்தை வெளியேற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். 

வடக்கில் உள்ள  இராணுவத்தை வெளியேற்ற வேண்டும்  என வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் கூறிவரும் நிலையில் அதற்கு பதில் கூறும் வகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.