Header Ads



வீடு திரும்ப தாமதித்த பெற்றோர், மகன்செய்த காரியம்

பேருவளை - காலவில பிரதேசத்தில் தனது வீட்டுக்கு இளைஞர் ஒருவர் தீ வைத்துள்ளார்.

20 வயதுடைய குறித்த இளைஞரை தனிமையில் விட்டு, பெற்றோர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், பெற்றோர் வீடு திரும்புவதற்கு தமாதமாகியமமையினால், கோபமடைந்து தனது வீட்டுக்கே இளைஞர் தீ வைத்துள்ளார்.

வீட்டில் இருந்த கடதாசிகளை இணைத்து வீட்டுக்கு தீவைத்துள்ளமை அறியவந்துள்ளது.

இந்நிலையில், காவற்துறை மற்றும் அளுத்கம தீயணைப்பு பிரிவு ஒன்று  விரைந்து தீயணைப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவம் குறித்து அளுத்கம காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.