Header Ads



மைத்திரியே அடுத்த, ஜனாதிபதி வேட்பாளர்

நிறை­வேற்று அதி­கா­ரம்­கொண்ட ஜனா­தி­பதி ­மு­றை­மையை  நீடிக்­க­வேண்டும். அதன்­படி 2021 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெ­ற­வேண்டும். அதில் சுதந்­தி­ரக்­கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ளராக  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே போட்­டி­யி­ட­வேண்டும்.  இதுவே ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் நிலைப்­பா­டாகும். இந்த நிலைப்­பாட்டை ஜனா­தி­பதி ஏற்­றுக்­கொண்டே ஆக­வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சா­ளரும், இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார். 

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்­க­வேண்டும் என்ற கோரிக்­கையை நாங்கள் முற்­றாக நிரா­க­ரிக்­கின்றோம். அந்த கோரிக்­கைக்கு நாங்கள் ஆத­ரவு வழங்­கவும் மாட்டோம் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். 

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை மாற்றம் தொடர்பில் சுதந்­தி­ரக்­கட்­சியின் நிலைப்­பாடு குறித்து  விப­ரிக்­கை­யி­லேயே  டிலான் பெரேரா மேற்­கண்­ட­வாறு கூறினார். அவர்  இது தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்,

ஜனா­தி­பதி முறை­மையை முற்­றாக நீக்­கு­வ­தற்கு சுதந்­தி­ரக்­கட்சி ஒரு­போதும் ஒத்­து­ழைப்பு வழங்­காது. நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை நீடிக்­க­வேண்டும் என்­பதே சுதந்­தி­ரக்­கட்­சியின் நிலைப்­பா­டாகும்.  

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தேர்தல் காலத்தில் வழங்­கிய வாக்­கு­று­தியில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு செல்­லா­த­வ­கையில் நிறை­வேற்று  அதி­கார ஜனா­தி­பதி முறை­மையில் மாற்றம் செய்­யப்­படும் என கூறி­யி­ருந்தார்.  

ஆனால் சோபித்த தேரரின் மறைவின் போது அவர் ஜனா­தி­பதி முறைமையை முழு­மை­யாக ஒழிப்­ப­தாக கூறி­யி­ருந்தார். 

இருப்­பினும் சுதந்­திரக் கட்­சியின் நிலைப்­பா­டா­னது ஜனா­தி­பதி முறைமை நீடிக்­க­வேண்டும் என்­ப­தாகும். அதன்­படி 2021 ஆம் ஆண்டு அடுத்த ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெ­ற­வேண்டும். அதில் சுதந்­தி­ரக்­கட்­சியின் வேட்­பா­ளராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே போட்­டி­யி­ட­வேண்டும். 

அவர் அவ்­வாறு அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட முடி­யாது எனக்­கூ­றினால்  அது தொடர்பில் நாம் சிந்­திக்­கலாம். ஆனால் கட்­சியின் தீர்­மா­னத்தை ஜனா­தி­பதி  ஏற்­றுக்­கொள்வார் என நம்­பு­கிறோம். 

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலை­வ­ராக  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன காணப்­ப­டு­கின்றார். அவர் கட்­சிக்கு பாரிய ஜன­நா­யக கட்­ட­மைப்பை வழங்­கி­யி­ருக்­கிறார். முன்னர் இல்­லாத ஜன­நா­யக கட்­ட­மைப்பு தற்­போது ஏற்­பட்­டுள்­ளது. அந்த ஜன­நா­யக கட்டமைப்பிற்குள் இருந்துதான் நாங்கள் செயற்படுகின்றோம். அந்தவகையில்  ஜனாதிபதி முறைமை நீடிக்கவேண்டும் என்பதும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிடவேண்டும் என்பதும் எமது நிலைப்பாடாகும். அதனை அவர் ஏற்றுக்கொள்வார் என  நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

2 comments:

  1. இந்த மனநோயாளி எல்லாம் அரசியலில் இருந்து ஓரம் கட்ட வேண்டும்.இவன் ஆட்சிக்கு வந்து என்ன நாட்டுக்கும் மக்களுக்கும் உருப்படியா செய்தான்.தரித்திரியம் புடிச்சவன்.

    ReplyDelete
  2. Dilan perera agent of mahinda rajapaksha

    ReplyDelete

Powered by Blogger.