Header Ads



பாடசலையில் வாந்தி எடுத்த, மாணவிக்கு நேர்ந்த துயரம் - தாய் வேதனை


கெக்கிராவையிலுள்ள மாணவி ஒருவர் சத்தி எடுத்த காரணத்தினால் அவர் கர்ப்பமாக உள்ளார் என தெரிவித்து வைத்திய பரிசோதனை நடத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கெக்கிராவையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவி இந்த சம்பவத்தால் உளவியல் ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டு தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த மாணவி பாடசாலை நேரத்தில் சத்தி எடுத்த காரணத்தினால் பாடசாலை அதிபர் மற்றும் ஒழுக்காற்றுக் குழுவினால் அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி காலை உணவு சாப்பிடாமல் வந்த காரணத்தினால் பாடசாலையில் சத்தி எடுத்துள்ளார். ஆனால் இதை முதலில் தவறாக புரிந்து கொண்டு குறித்த மாணவி கர்ப்பமாக இருப்பதாக பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையடுத்து குறித்த மாணவியின் பெற்றோரை அழைத்து வந்து குறித்த மாணவி கர்ப்பமாக இருப்பதாகவும், இதனால் பாடசாலையில் இருந்து விலக்கப்படுவதாகவும் தெரிவித்து கடிதம் ஒன்றை கையளித்துள்ளார்கள்.

இதையடுத்து குறித்த பெற்றோர் பாதிக்கப்பட்ட மாணவியை தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதித்து அவர் கர்ப்பமாக உள்ளாரா என பரிசோதனை நடத்தியுள்ளார்கள்.

இதன்போது, குறித்த மாணவி எவ்வித பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படவில்லை எனவும், அவர் நலமாக உள்ளார் எனவும், கர்ப்பமாக இல்லை எனவும் தம்புள்ளை வைத்தியசாலையில் மருத்துவ சேவைகள் பணிப்பாளர் டாக்டர் காமினி சேனநாயக்க பெற்றோருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

எனினும் இந்த சம்பவத்தில் உளவியல் ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணவி தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

எனினும் தமது மகள் கல்வியிலும், ஏனைய துறைகளிலும் சிறந்து விளங்கியதாகவும், தற்போது உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதை நினைத்து தாம் கவலையடைவதாகவும் குறித்த மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.