Header Ads



புலிகள் தாக்குதல் ஒத்திகை நடத்திய, இடத்தில் குண்டுகள் மீட்பு


புலிகள் 2008 ம் ஆண்டு அநுராதபுரம் விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஒத்திகை பார்க்கப்பட்ட வட்டகச்சி பகுதியிலிருந்து வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி வட்டகச்சி புழுதியாறு குளப்பகுதியில் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய வெடிப்பொருட்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

யுத்த காலத்தில் 2008 ஆம் ஆண்டு அநுராதபுரம் விமானப்படைத் தளம் விடுதலைப் புலிகளினால் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதற்கு முன் இப் பிரதேசத்தில் தாக்குதல் ஒத்திகை பார்க்கப்பட்டதாகவும் அங்கு மாதிரி விமான ஓடுதளம் என்பன காணப்பட்டதாகவும் பொலிஸ் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

விமானப்படைக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைவாக விமானப்படயினர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து கிளிநொச்சி நீதிவான் நீதமன்றத்தின் அனுமதி பெற்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது 60 மில்லி மீற்றர் 10 மோட்டார் செல்கள், 81 மில்லி மீற்றர் 01 மோட்டார் செல் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இத் தேடுதல் நேற்றுமுன்தினம் இரவு விசேட அதிரடி படையினர், காவல்துறையினர், விமானப்படையினர் ஆகியோர் இணைந்து மேற்கொண்டிருந்தனர். 

No comments

Powered by Blogger.