தெற்கு நெடுஞ்சாலையில் லொறி சரிந்து, பெருந்தொகை பன்றி இறைச்சி வீதியில் சிதறியது
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 34 ஆவது கிலோமீற்றர் பிரதேசத்தில், பன்றி இறைச்சியை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மற்றொரு லொறியினால் மோதப்பட்டு சரிந்ததில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்துக்குள்ளான லொறியிலிருந்து வீழ்ந்த இறைச்சி பாகங்கள் வீதியில் சில மீற்றர் தூரத்துக்கு சிதறிக் காணப்பட்டன.
இரு லொறிகளின் சாரதிகளும், உதவியாளர் ஒருவருமே காயமடைந்த நிலையில் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பிலிருந்து மாத்தறை கடுவன நோக்கி பன்றி இறைச்சிகளை ஏற்றிச் சென்ற சிறிய லொறியொன்று மீன்கள் ஏற்றிவருவதற்காக வெலிகம, மிரிஸ்ஸ நோக்கி சென்றுகொண்டிருந்த லொறியை மோதுண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தினால் காலி நோக்கிய அதிவேக நெடுஞ்சாலையின் ஓர் ஒழுங்கை சில மணிநேரங்களுக்கு மூடப்பட்டிருந்ததாக அதிவேக நெடுஞ்சாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் இரு லொறிகளுக்கும் அதிவேக நெடுஞ்சாலையின் பாதுகாப்பு வேலிக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ள அதேவேளை, வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் சாரதி உதவியாளரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(ரெ.கிறஷ்ணகாந்)
Post a Comment