Header Ads



இப்படியும் கொள்ளையடிக்கிறார்கள், எச்சரிக்கையாக இருங்கள்..!


தம்மை பொலிஸார் எனக் கூறிக் கொண்டு வீடு ஒன்­றுக்குச் சென்ற மூவர் வீட்­டாரை அச்­சு­றுத்தி அவர்­களின் கண்­களைக் கட்டி வீட்டின் ஓரி­டத்தில் அமரச் செய்த பின்னர் பணம், நகை­களைக் கொள்­ளை­ய­டித்துச் சென்ற சம்­பவம் ஒன்று பதுளைப் பகு­தியின் கீனக்­கலை என்ற இடத்தில் சனிக்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளது.

கொள்­ளை­யர்கள் சென்ற பின்­னர், கண்கள் கட்­டப்­பட்ட நிலையில் காணப்­பட்ட கண­வனும் மனை­வியும் அதனை ஒரு­வாறு அகற்­றிய பின்னர் பதுளை பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்­ளனர்.

இம்­மு­றைப்­பாட்டில் ஐம்­ப­தா­யிரம் ரூபா பணமும் ஐந்து பவுண் தங்க நகை­களும் கொள்­ளை­யி­டப்­பட்­ட­தாக தெரி­வித்­துள்­ளனர்.

பொலிஸாரின் உடை­களை ஒத்த உடை­ய­ணிந்­தி­ருந்த இந்த மூவரும் தாம் பொலிஸார் என்று கூறி குறித்த வீட்­டிற்குள் சென்று வீட்டை சோத­னை­யிட வேண்டும் என்றும் அச்­சோ­த­னைக்கு இடை­யூ­றுகள் ஏற்­படக் கூடா­தென்று கூறி, பய­மு­றுத்தி தம்­ப­தி­யி­னரின் கண்­களைக் கட்டி ஓரி­டத்தில் அமரச் செய்து கொள்­ளை­யிட்­டுள்­ளனர்.

இம்­மு­றைப்­பாட்­டை­ய­டுத்து, பதுளை பொலி­ஸா­ர் மோப்ப நாய்­களின் துணை­யுடன் குறிப்­பிட்ட வீட்­டி­லி­ருந்து ஐந்து கிலோ­மீற்றர் தூரம் வரை சென்றே கொள்­ளை­யர்கள் இருவர் கைது செய்­யப்­பட்­டனர்.

மேலு­மொ­ருவர் தங்­கச்­சங்­கி­லி­யுடன் தலை­ம­றை­வா­கி­யுள்ளார். விரைவில், அந்­ந­ப­ரையும் கைது செய்ய முடி­யு­மென்று, பொலிஸார் தெரி­வித்­தனர்.

கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளி­ட­மி­ருந்து கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட பணத்தில் 35 ஆயிரம் ரூபாவை, பொலிஸார் மீட்­டுள்­ளனர்.

இக்­கொள்­ளையில் ஈடு­பட்ட மூவரில் இருவர் இரா­ணு­வத்­தி­லி­ருந்து தப்பிச் சென்­ற­வர்கள் என்­பதும் விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரிய வந்துள்ளது.

(எம். செல்­வ­ராஜா)

3 comments:

  1. ஹிஜாப் அணிந்து கொள்ளையடித்தால், ஹிஜாபைத் தடை செய்ய வேண்டுமாம். தாடியோடு தொப்பியோடு கொள்ளையடித்தால் தாடியை தொப்பியை தடை செய்ய வேண்டுமாம்.

    பொலிஸ் உடை அணிந்து கொள்ளையடிக்கிறார்கள், என்ன செய்ய வேன்டும்????

    ReplyDelete
  2. போலீசாருக்கு சாரம் கட்ட சொன்னால் செரி

    ReplyDelete

Powered by Blogger.