6 இலட்சம் தேங்காய்கள், பதுக்கி வைக்கப்பட்டுள்ளது
மொத்த விற்பனையாளர்கள் சிலர் தேங்காய்களை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதென தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.
சுமார் 6 இலட்சம் தேங்காய்கள் பதுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் கபில யகன்தாவல குறிப்பிட்டார்.
அவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதுடன், இது குறித்து எதிர்வரும் வாரத்திற்குள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, அரசாங்கத்தின் கையிருப்பிலுள்ள தேங்காய்களை 60 ரூபாய் என்ற கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்வதற்கு அரசு கடந்த சில வாரங்களுக்கு முன் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் சந்தையில் தேங்காயின் விலை பாரியளவு அதிகரித்திருந்த சூழ்நிலையில், அது தொடர்பில் பொதுமக்கள் பல அசௌகரியங்களை தொடர்ந்தும் எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment