Header Ads



விமான நிலையத்திற்குள், சுற்றித்திரிந்த 60 பேர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றித்திரிந்த 60 பேரை, கட்டுநாயக்க குற்றத்தடுப்புப் பொலிஸார் கைது செய்து, மினுவாங்கொடை மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.   

இவர்கள் ஒவ்வொருவருக்கும், தலா 1, 500 ரூபாய் வீதம், 90 ஆயிரம் ரூபாயை அபராதமாகத் தொகையாக செலுத்துமாறு, மினுவாங்கொடை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.   

நாட்டின் பல பாகங்களிலுமிருந்தும் கட்டுநாயக்க வந்து சுற்றித்திரிந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் ஆண்கள் என, நீதிமன்ற பதிவேட்டில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.    

-ஐ. ஏ. காதிர் கான்-

No comments

Powered by Blogger.