Header Ads



யாழ்பாணத்தில் 4 பேர் சடலமாக மீட்பு

யாழ் அரியாலை மாம்பழச்சந்தி பகுதியில் வீடொன்றில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் இன்று பிற்பகல் (27) சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தாய் உட்பட மூன்று பிள்ளைகள் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பிள்ளைகளின் தந்தை ஒரு மாதத்துக்கு முன்னரே தற்கொலை செய்து கொண்ட நிலையில், தாய், தனது மகள், இரண்டு மகன்களுடன் தனியே வசித்து வந்துள்ளதாக தெரியவருகிறது.

இவர்கள் விசமருந்து தற்கொலை செய்துகொண்டிருப்பதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அயலவர்கள் வழங்கிய தகவலுக்கமையவே பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகைத்தந்து, விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.