Header Ads



ரோஹின்யர்களுக்கு எதிரான அத்துமீறல், தேடப்படுகிறார் பொலிஸ் கன்ஸ்டபிள் - 2 தனிப்படைகள் அமைப்பு

மியன்­மாரில் இருந்து வந்த ரோஹிங்ய முஸ்லிம் அக­தி­களை உட­ன­டி­யாக வெளி­யேற்றி நாடு கடத்­து­மாறு பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வினர் செய்த அத்­து­மீ­றல்கள் மற்றும் தாக்­கு­தல்கள் தொடர்பில் முன்­னின்று செயற்­பட்ட மேலும் இரு­வரை கைது செய்ய இரு தனிப்­ப­டைகள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. 

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் நிசாந்த சொய்ஸாவின் நேரடிக் கட்­டுப்­பாட்டில் இந்த இரு தனிப்­ப­டை­களும் அமைக்­கப்­பட்­டுள்­ளன. கிரு­லப்­பனை, பூர்­வா­ராம விகா­ரையின் அரம்­பே­பொல ரத­ன­சார தேரர் மற்றும் முன்னாள் பொலிஸ் கான்ஸ்­ட­பி­ளான, வாதுவைப் பகு­தியைச் சேர்ந்த பிரகீத் சானக குண­தி­லக ஆகி­யோரைக் கைது செய்­யவே இவ்­வாறு விஷேட பொலிஸ் படை அமைக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் சட்­டத்­த­ரணி ருவான் குண­சே­கர தெரி­வித்தார்.

இதில் பிரகீத் சானக்க குண­தி­ல­க­வுக்கு எதி­ராக பாணந்­து­றையில் முஸ்லிம் பள்­ளி­வாசல் மீது  பெற்றோல் குண்டுத் தாக்­குதல் நடத்­தி­யமை மற்றும் பாணந்­துறை பாலிகா வித்­தி­யா­லயம் ஒன்றின் பெண் அதி­பரை அச்­சு­றுத்­தி­யமை  ஆகிய குற்­றச்­சாட்­டுகள் உள்­ள­தா­கவும் அது தொடர்பில் அவர் கைது செய்­யப்­பட்டு பிணையில் உள்­ள­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் ருவன் குண­சே­கர சுட்­டிக்­காட்­டினார்.

இந் நிலையில், குறித்த இரு­வரும் தற்­போது தமது இருப்­பி­டங்­களை விட்டு தலை­ம­றை­வா­கி­யுள்­ள­தா­கவும் அவர்கள் தொடர்பில் எவ­ரேனும் தகவல் அறிந்தால் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் நிசாந்த சொய்­ஸாவின் 0718591727 எனும் இலக்­கத்­துக்கு தகவல் தரு­மாறும் பொலிஸார் வேண்­டுகோள் விடுத்­தனர்.

அதன்­படி ரோஹிங்ய முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான அத்­து­மீறல் தொடர்பில் இது­வரை ஒரு தேரர், பெண்­ணொ­ருவர் உள்­ளிட்ட 8 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். அவர்களில் ஒருவருக்கு பொலிஸ் பிணை அளிக்கப்பட்டுள்ளதுடன் தேரர், பெண் உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 MFM.Fazeer

2 comments:

  1. Not enough , get international police help also

    Big drama
    My muslim brothers pls don't believe this government. ...they try to make another rohingya in our country. ..
    We muslims should getogether and take a firm step to stop this drama in future.....

    ReplyDelete
  2. Same thing will happen as gnanasara arrest.they will arrest them and grant them bail so need to confuse. Laws for only ordinary people not riches people

    ReplyDelete

Powered by Blogger.