ரோஹின்யர்களுக்கு எதிரான அத்துமீறல், தேடப்படுகிறார் பொலிஸ் கன்ஸ்டபிள் - 2 தனிப்படைகள் அமைப்பு
மியன்மாரில் இருந்து வந்த ரோஹிங்ய முஸ்லிம் அகதிகளை உடனடியாக வெளியேற்றி நாடு கடத்துமாறு பிக்குகள் தலைமையிலான குழுவினர் செய்த அத்துமீறல்கள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பில் முன்னின்று செயற்பட்ட மேலும் இருவரை கைது செய்ய இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த சொய்ஸாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இந்த இரு தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கிருலப்பனை, பூர்வாராம விகாரையின் அரம்பேபொல ரதனசார தேரர் மற்றும் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிளான, வாதுவைப் பகுதியைச் சேர்ந்த பிரகீத் சானக குணதிலக ஆகியோரைக் கைது செய்யவே இவ்வாறு விஷேட பொலிஸ் படை அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ருவான் குணசேகர தெரிவித்தார்.
இதில் பிரகீத் சானக்க குணதிலகவுக்கு எதிராக பாணந்துறையில் முஸ்லிம் பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தியமை மற்றும் பாணந்துறை பாலிகா வித்தியாலயம் ஒன்றின் பெண் அதிபரை அச்சுறுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் அது தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு பிணையில் உள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டினார்.
இந் நிலையில், குறித்த இருவரும் தற்போது தமது இருப்பிடங்களை விட்டு தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்கள் தொடர்பில் எவரேனும் தகவல் அறிந்தால் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த சொய்ஸாவின் 0718591727 எனும் இலக்கத்துக்கு தகவல் தருமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்தனர்.
அதன்படி ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல் தொடர்பில் இதுவரை ஒரு தேரர், பெண்ணொருவர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு பொலிஸ் பிணை அளிக்கப்பட்டுள்ளதுடன் தேரர், பெண் உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Not enough , get international police help also
ReplyDeleteBig drama
My muslim brothers pls don't believe this government. ...they try to make another rohingya in our country. ..
We muslims should getogether and take a firm step to stop this drama in future.....
Same thing will happen as gnanasara arrest.they will arrest them and grant them bail so need to confuse. Laws for only ordinary people not riches people
ReplyDelete