ரோஹின்யர்கள் பூஸா முகாமுக்கு, அனுப்பப்பட வேண்டியவர்கள் அல்லர் - அவமானகரமானது என EU கண்டனம்
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மார் ரோஹிங்ய அகதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சி மற்றும் அவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை அலுவலகம் வன்மையாக கண்டித்துள்ளது.
ஐ.நா. அகதிகள் பேரவையின் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டிருந்த இந்த அகதிகளுக்கு எதிரான நடவடிக்கையானது அவமானகரமானதும் அடிப்படையற்றதுமாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை அலுவலகம், குறித்த அகதிகள் பூஸா முகாமுக்கு அனுப்பப்பட வேண்டியவர்கள் அல்லர் என்றும் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.
Post a Comment