BMW உள்ள பிக்கு முதலாளிமார்கள், திருடர்களை பாதுகாக்கிறார்கள் - ரஞ்சன்
சில் துணி மோசடியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு சொகுசு ஹோட்டலிலிருந்து சைனீஸ் சாப்பாடு வருவதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
திருடர்களை காப்பாற்ற சில பிக்குமார் பணம் திரட்டுவதாக குறிப்பிட்ட அவர், சிறைச்சாகைளில் வசதியான அரசியல்வாதிகளை ஒருவிதமாகவும் கிராமத்து அப்பாவி மக்களை வேறுவிதமாகவும் நடத்துவதாகவும் குறிப்பிட்டார்.
வெலிக்கடை சிறைச்சாலை முன்பாக நேற்று(12) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்: 60 கோடி ரூபா அரசாங்க பணத்தை திருடியது தொடர்பான வழக்கு விசாரணைக்கு சிறந்த தேகாரோக்கியத்துடன் வரும் இவர்கள் தீர்ப்பு வழங்கியவுடன் நோயாளியாகி விடுகின்றனர். இவ்வாறு நோயுடன் இவர்கள் எப்படி அரச சேவையில் இருந்தார்கள் என்பது சந்தேகமே.
சில பி.எம் டபிள்யூ பிக்கு முதலாளிமார்கள் திருடர்களை பாதுகாக்க முயல்கிறார்கள். இவர்களுக்கு சொகுசு ஹோட்டலிலிருந்து தினமும் சாப்பாடு வருகிறது என்றார்.
Post a Comment