Header Ads



ரோஹிங்யா முஸ்லிம்களை, நாங்கள் தாக்­கி­ய­தை நிரூ­பிக்க முடி­யுமா? அக்­மீ­மன தேரர் சவால்

ரோஹிங்யா அக­தி­களை நாங்கள் தாக்­க­வில்லை. முடி­யு­மானால் நாங்கள் அவர்­களை தாக்­கி­ய­தாக அர­சாங்கம் நிரூ­பிக்­கட்டும் என சிங்­கள ராவய அமைப்பின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் தெரி­வித்தார். சிங்­கள ராவய அமைப்பு நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

கல்­கிஸை பிர­தே­சத்தில் ரோஹிங்­கியா முஸ்­லிம்கள் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக எமக்கு தகவல் கிடைத்­தது. அதன் பிர­காரம் நாங்கள் அங்கு சென்று கல்­கிஸை பொலிஸில் இது தொடர்­பாக வின­வினோம். ஆனால் பொலிஸார் இது தொடர்­பாக எதுவும் தெரி­யாது என எங்­க­ளிடம் தெரி­வித்­தனர். அதன் பின்­னர்தான் நாங்கள் அவர்கள் இருக்கும் இடத்தை கண்­ட­றிந்து அவர்­களை அந்த இடத்தில் இருந்து வெளி­யேற்­று­மாறு தெரி­வித்தொம்.

அத்­துடன் இவர்கள் ஐக்­கிய நாடுகள் அமைப்பின் அக­திகள் தங்­க­வைக்­கப்­படும் முகாமில் அவர்­களின் கட்­டுப்­பாட்டில் இருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டது. அப்­ப­டி­யானால் அவர்கள் அக­திகள் முகாமில் தங்­க­வைக்­கப்­ப­ட­வேண்டும். அவர்­க­ளுக்கு பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­ப­ட­வேண்டும். அந்த இடத்தில் ஐக்­கிய நாடு­களின் கொடி தொங்­க­வி­டப்­ப­ட­வேண்டும். அவ்­வாறு எதுவும் இங்கு இடம்­பெ­ற­வில்லை.

மாறாக ரோஹிங்­கியா அக­திகள் கல்­கிஸை பகு­தியில் சொகுசு மாடி வீட்டில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­களின் பிள்­ளைகள் பிர­பல பாட­சா­லை­களில் சேர்க்­கப்­பட்­டுள்­ளனர். எமது பிள்­ளை­களை அந்த பாட­சா­லை­களில் சேர்த்­துக்­கொள்­வ­தென்றால் அதற்கு பல நிபந்­த­னை­களை விதிப்­பார்கள். அத்­துடன் இவர்கள்  பொலி­ஸா­ருக்கு தெரி­யாமல் இருப்­பது பெரும் தவ­றாகும்.

 அமைச்­சர்­க­ளான ராஜித்த, மங்­கள போன்­ற­வர்கள் தெரி­விப்­ப­து­போன்று நாங்கள் அந்த மக்­களை தாக்­கு­வ­தற்கு செல்­ல­வில்லை. அவர்­களை அந்த இடத்தில் இருந்து அகற்­று­மாறு தெரி­வித்தே எமது மக்கள் ஆர்ப்­பாட்டம் செய்­தனர். என்­றாலும் மாலை வரை பொலிஸார் எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கா­த­தால்தான் மக்கள் குழப்­ப­ம­டைந்து செயற்­பட்­டனர். அவ்­வாறு நாங்கள் அவர்­களை தாக்­கி­யதை அர­சாங்கம் முடி­யு­மானால் ஒப்­பு­வித்து காட்­டட்டும்.

மேலும் ரோஹிங்­கியா இனத்­த­வர்கள் நாட்டில் இல்லை. அவர்­களை வெளி­யேற்­றி­ய­தாக அமைச்­சர்கள் பகிரங்கமாக தெரிவித்து வந்தனர். அப்படியானால் இவர்கள் இருப்பது அரசாங்கத்துக்கும் தெரியாது, நாட்டின் புலனாய்வுத்துறைக்கும் தெரியாது. அரசாங்கம் செய்த தவறை மறைப்பதற்கே தேரர்களை விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர் என்றார்.

1 comment:

  1. We do not to answer this bloody dog. Go to hell.

    ReplyDelete

Powered by Blogger.