பங்களாதேஷில் ரோஹின்ய முஸ்லிம்களுக்கு, கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
வங்காளதேசத்தில் ரோஹிங்யா அகதிகளின் எண்ணிகை 4 லட்சமாக உயர்ந்துள்ளது. அதனால் அவர்களுக்காக 14000 முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, பேரிடர் மேலாண்மை துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில்,
மியான்மரில் இருந்து வரும் ரோஹிங்யா அகதிகள் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. எனவே அவர்களை தங்க வைக்கும் வகையில் தற்காலிக முகாம்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 14000 முகாம்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றை 10 நாள்களில் அமைத்து தரும்படி கோரிக்கை விடுத்துள்ளோம்.
ரோஹிங்யா அகதிகள் மீண்டும் அவர்களது நாட்டுக்கு திரும்பும்வரை அந்த முகாம்களில் தான் தங்க வேண்டும். சாலை, ரெயில் மற்றும் நீர் வழியாகவோ ஓரிடத்தில் இருந்து மற்ற இடத்துக்கு செல்ல அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்துள்ளனர்.
Post a Comment