விஜேதாஸ எந்தப்பக்கம் அமருவார்..? ரெடியாகும் ரோசி
பாராளுமன்றத்தில் இன்றைய தினம் -06- எதிரணி ஆசனத்தில் விஜேதாஸ ராஜபக் ஷ அமர்ந்தால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு அவரது பாராளுமன்ற உறுப்புரிமை கேள்விக்குறியாக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் கலந்துரையாடியுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக் ஷவின் பாராளுமன்ற உறுப்புரிமை குறித்து ஐக்கிய தேசிய கட்சி கவனத்தில் கொண்டுள்ளது. பாராளுமன்ற அமர்வுகளின் போது ஆளும் தரப்பு பின்வரிசை ஆசனத்தில் அமரும் பட்சத்தில் அவரது பாராளுமன்ற உறுப்புரிமை பாதுகாக்கப்படும். ஆனால் எதிரணியில் அமர்ந்தால் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவி சவாலுக்கு உட்படும்.
எனவே இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளனர். பாராளுமன்ற அமர்வுகளின் போது விஜேதாஸ ராஜபக் ஷ எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்தால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் அந்த வெற்றிடத்திற்கு ரோசி சேனாநாயக்கவை தெரிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதி மற்றும் பௌத்த சாசன முன்னாள் அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷ அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மீறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு அண்மையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் பின்னர் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதியளித்தார்.
தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக் ஷவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு கூட்டு எதிர்க்கட்சி ஆதரவு கரம் நீட்டியுள்ளது. இவ்வாறானதொரு நிலைமையிலேயே அவரது பாராளு மன்ற உறுப்புரிமை குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கருத்தில் கொண் டுள்ளமை குறிப் பிடத்தக்கது.
Post a Comment