அறநெறி கற்கச்சென்ற சிறுமிக்கு, பாலியல் துன்புறுத்தல் - விகாராபதிக்கு விளக்கமறியல்
அறநெறி வகுப்புக்கு சென்ற சிறுமியை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதன் பேரில் விகாராதிபதி ஒருவரை குறுந்துவத்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கம்பளை மாவட்ட நீதிமன்ற நீதிவான் சாந்தினி மீகொட முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
குறுந்துவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழுவல பௌத்த விகாரையின் விகாராதிபதி ஒருவரே சம்பவதினம் சமய வகுப்பிற்குச் சென்றிருந்த பாடசாலை மாணவியான பாதிக்கப்பட்ட சிறுமியை அங்கிருந்த அரச மரமொன்றின் பின்னால் மறைவான இடத்துக்கு ஏமாற்றி கூட்டிச்சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
மேற்படி சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோருக்கு தெரி வித்துள்ளார். இதையடுத்து பெற்றோர் குறுந்துவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்திக ஸ்ரீகாந்தவின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்தே குறித்த பௌத்த பிக்கு கைது செய்யப்பட்டு கம்பளை மாவட்ட நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து மேற்கண்ட உத்தர வினை நீதிவான் பிறப்பித்தார்.
Post a Comment