யாழ்ப்பாண வைத்தியசாலையில் குட்டிபோட்ட பாம்பு, கொழும்புக்கு அனுப்பிவைப்பு
யாழ். போதனா வைத்தியசாலையில் பாம்பு ஒன்று அதிகளவான குட்டிகளை போட்டுள்ளது.
குறித்த பாம்பு ஒருவரை தீண்டிய நிலையில், அந்தப் பாம்புடன் யாழ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
காரைநகரை சேர்ந்த 36 வயதான சுப்பிரமணியம் சிறிரங்கன் என்பவரே பாம்புக் கடிக்கு இலக்காகினார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் தீண்டிய பாம்பை இனம்காணும் நோக்கில் அதனை போத்தலில் அடைத்து வைத்தியசாலைக்குக் கொண்டு வந்துள்ளார்.
இதன்போது குறித்த பாம்பு சிறிது நேரத்தில் 9 குட்டிகளை வைத்தியசாலையில் போட்டுள்ளது. இதன் காரணமாக வைத்தியசாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும் குறித்த பாம்பினை பரிசோதித்த வைத்தியர்கள், அதை கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பாம்புக் கடிக்கு இலக்கான சுப்பிரமணியம் சிறிரங்கன் யாழ். போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
Post a Comment