ஹுசைன் ஒரு இராஜதந்திர விபச்சாரி - விமல்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் ஒரு இராஜதந்திர விபச்சாரி என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவின் தேவைகளை நிவர்த்தி செய்யவும், அமெரிக்காவை திருப்திபடுத்துவதற்காகவே அவர் ஐக்கிய நாடுகள் சபையில் அமர்த்தப்பட்டுள்ளார் எனவும் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இலங்கை விவகாரத்தில் தலையிட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைனுக்கு எந்த உரிமையும் இல்லை.
சர்வதேச நாடுகளின் சட்டங்களுக்கு அமையவே தமிழீழம் உருவாக்கப்பட்டு வருகின்றது. இதற்காகவே, புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றது என அவர் மேலும் கூறியுள்ளார்.
ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல்ஹுசைனுக்கு இத்தகைய கீழ்த்தரமாக விமர்சிக்க உமக்கு எந்த தகுதியும் இல்லை.முதலில் உமது வீட்டுக்குள்ளே திருத்திவிட்டு உலகத்தைத்திருத்து.அரசியலோ அரசியல் சாணக்கியமோ ஒரு துளியளவேனும் தெரியாத உனது பேச்சுக்கு இடம் கொடுப்பவர்கள் பற்றியும் எமக்குச் சந்தேகம்.
ReplyDeleteSo what?
ReplyDeletelet the dogs bark ,the caravan proceeds.
ReplyDelete