யாழ் ஹதீஜா பெண்கள் கல்லூரி, புதிய கட்டிட பணிகள் ஆரம்பம்
-பாறுக் ஷிஹான்-
யாழ் ஹதீஜா பெண்கள் கல்லூரியின் புதிய கட்டிட நிர்மாணப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இக் கல்லூரியின் புதிய கட்டடத்திற்கான நிதியினை இந்திய அரசாங்க நிதி ஒதுக்கீடு ஊடாக நிர்மாணிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது 3 மாடிக் கட்டிடத்திற்கான வேலைத்திட்டங்களே ஆரம்பிக்கப்பட்டுள்ள அதே வேளை ஏற்கனவே மலசல கூடங்கள் ஆசிரியர்களுக்கான விடுதி அறைகள் நிர்மாணிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது.
1990 ஆம் ஆண்டிற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்த முஸ்லிம் பாடசாலைகளில் முஸ்லீம் மாணவிகளுக்கெ இருந்த ஒரே ஒரு பாடசாலை இதுவாகும்.
மேற்படி பாடசாலைக்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா அண்மையில் கல்லூரிச் சமூகத்தின் ஏற்பாட்டில் வடமாகாண கல்வியமைச்சினதும் இந்திய துணைத்தூதுவராலயத்தின் பங்குபற்றுதலுடனும் நடைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment