கல்முனையை தனி மாவட்டமாக பிரகடனம் செய்யாவிட்டால் எனது பதவியை துறப்பேன் - பாராளுமன்றில் ஹரீஸ் சூளுரை
புதிய அரசியலமைப்புக்கான இறுதி அறிக்கையில் கல்முனையை தனி மாவட்டமாக பிரகடனம் செய்யாவிட்டால் குறித்த இறுதி அறிக்கைக்கு வாக்களிக்காது எனது பிரதி அமைச்சு பதவியை துறந்து விடுவேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினரும் பிரதி அமைச்சருமான ஹரீஸ் சபையில் சூளுரைத்தார்.
வடக்கு, கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் மக்களும் எம்.பிக்களும் துணை போகமாட்டார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தடம்புரண்டு செயற்பட்டு வருகின்றது. இதன் காரணமாக கிழக்கு இளைஞர்கள் கூட்டமைப்பின் மீது விரக்தி கொண்டுள்ளனர். எனவே கிழக்கில் மக்களை அணிதிரட்டி போராடி வடக்கு, கிழக்கு இணைப்புக்கு இடமளிக்கமாட்டோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க் கிழமை மீள ஒப்படைத்தல் சட்டத்தின் கட்டளைகள், ஏற்றுமதி சட்ட மூலத்தின் கட்டளைகள் மீதான விவாத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், சுதந்திர கட்சியும் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதிரணியுமே வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தை எதிர்த்து வருகின்றன. இது எமக்கு நம்பிக்கையளிக்கிறது.
வடக்கு கிழக்கையும் இணைப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டு வருகின்றது. இந்த திட்டத்திற்கு நாம் ஆதரவு வழங்கமாட்டோம். தமிழ் மக்களுக்கான 60 வருட போராட்டத்திலிருந்து தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தடம்புரண்டு செயற்படுகின்றது. வேறு திசையை நோக்கிப் பயணித்து கொண்டுள்ளது.
தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் செல்வநாயகம், சிவசிதம்பரம் போன்றோர் கிழக்கு மக்களுக்கு தனித்த பயணித்திற்கு இடமளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தனர். எனினும் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிலைப்பாடு மாற்றம் கண்டுள்ளது.
எனவே, வடக்கு கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் மக்களோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ துணைபோக மாட்டார்கள். இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இந்நிலையில் கிழக்கு முஸ்லிம்களுக்கு கூட்டமைப்பின் செயற்பாடு அதிருப்தி அளிக்கின்றது. மேலும் இதன்காரணமாக நாம் கூட்டமைப்பின் மீது நம்பிக்கை இழந்து விட்டோம். எமது இளைஞர்கள் விரக்தியுடன் உள்ளனர்.
வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் சுதந்திர கட்சியினதும் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதிரணியினர் நிலைப்பாட்டின் மீது நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். அதுவே எமக்கு நம்பிக்கை ஒளியாக தெரிகின்றது. எனவே வடக்கு ,கிழக்கு இணைப்பு எதிராக கிழக்கில் மக்களை அணிதிரட்டி போராடி வடக்கு கிழக்கு இணைப்பு இடமளிக்க மாட்டோம்.
அத்துடன் புதிய அரசியலமைப்புக்கான இறுதி அறிக்கையில் கல்முனையை தனி மாவட்டமாக பிரகடனம் செய்யாவிட்டால் குறித்த இறுதி அறிக்கைக்கு வாக்களிக்காது எனது பிரதி அமைச்சு பதவியை துறந்து விடுவேன் என்றார்.
MM.Minhaj
MM.Minhaj
உங்கட பதவிய துரங்க நாதி போல ஓட்டாடும் பிறகு இலங்கையில் 50 மாவட்டம் ஆகொனும்
ReplyDeleteIRIKKIRA UURAYA EVANUGHLALA OLUNGA SEYYA MUDIYALA,THANI MAAWATTAM WEERU???(ENNAYYA KODUMA
ReplyDeleteWhat about your Dubai and Bahrain?
ReplyDeleteமல்வானையை தனி மாவட்டமாக பிரகடனம் செய்ய வேண்டும், இல்லாவிட்டால் நானும் எனது பதவியை ராஜினாமா செய்வேன்.
ReplyDeleteஇப்படிக்கு
ரம்புட்டான் பிடுங்கி.
ReplyDeleteதமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் செல்வநாயகம், சிவசிதம்பரம் போன்றோர் கிழக்கு மக்களுக்கு தனித்த பயணித்திற்கு இடமளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தனர். எனினும் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிலைப்பாடு மாற்றம் கண்டுள்ளது.
வடிகட்டிய பொய்
சாய்ந்தமருது தனி பிரதேச சபை முடிந்துவிட்டது இப்போது கல்முனை மாவவட்டம் கேக்குதோ? பழைய கதையொன்று ஒருவன் மாட்டுப் பட்டிக்காறனிடம் பட்டிக்கு போய் கொஞ்சம் பால் கொடு என்று கேட்டானாம் அதற்கு பட்டிக்காறன் இங்கே பால் தர முடியாது எனது வீட்டுக்கு வா பசுவும் கன்றும் தருகிறேன் என்றானாம் .
ReplyDeleteவடகிழக்கு இணைப்பு சாத்தியம் உண்டோ இல்லையோ.இலங்கையில் முஸ்லீம் மாவட்டம் சாத்ததியமில்லை.இலங்கையில் அனைத்து மொழிகளுக்கும் சம அந்தஸ்த்து உண்டு எனவே மொழிரீதீயான கோரிக்கைகளுக்கு தடையில்லை.ஆனால் மதரீதியான கொரிக்கைகளுக்கு தடை உண்டு.
ReplyDeleteஐயா மக்கள் விழிப்பாகத்தான் உள்ளாரகள்.
ReplyDelete